உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Saturday, June 27, 2009

நிமிடம்....வணக்கங்கள்...?

கல்லூரியில் படிக்கின்ற காலங்களில் நண்பர்களிற்கும் எனக்கும் வானொலிகள் தொடர்பில் அடிக்கடி ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்படுவதுண்டு. அந்த வகையில் எனது அபிமானத்திட்குரிய, குருநாதராக நான் நினைக்கும் சிரேஷ்ட அறிவிப்பாளரின் வழிநடத்தலில் இருந்த வானொலி ஒன்றின் அபிமானி நான். இதனால் அந்த வானொலி தொடர்பாகவோ, அல்லது அந்த அறிவிப்பாளர் தொடர்பாகவோ யாராவது குறை சொன்னால் பிடிக்காது. அப்படி யாராவது சொனால் உடனடியாக எனது வாயிலிருந்து நியாயப்படுத்தல்கள் தானாக உ திரத்தொடங்கிவிடும். வேண்டுமென்றே நண்பர்கள் என்னை கோபப்படுத்தும் நோக்குடன் அப்படி சொல்ல்வதுமுண்டு.

அதனால் அடிக்கடி பல மனக்கசப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. அது அந்த வானொலியின் மீதும் அறிவிப்பாளர் மீதும் நான் வைத்திருந்த அளவு கடந்த அபிமானத்தின் விளைவு. அத்துடன் விவாதங்கள்,எதிர் கருத்துக்கள் தொடர்பில் பக்குவப்படாத பராயம் என்றும் அதனை சொல்லலாம்.

இப்படித்தான் ஒரு நாள் வானொலிகள் தொடர்பில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு நண்பன் குறித்த எனது அபிமானத்திட்குரிய அவ்வானொலி அறிவிப்பாளர் நேர அறிக்கையை வழங்கும்போது இருபது நிமிடங்கள் என்று பன்மையில் சொல்லாமல் இருபது நிமிடம் என்று ஒருமையில் செல்வதாகவும் ஆனால் அந்த வானொலிக்கு போட்டியாக உள்ள வானொலியில் அவ்வாறான தவறுகள் இடம்பெறுவதில்லை என்றும் இதனால் குறித்த அந்த அறிவிப்பாளர் ஒரு வானொலியை வழிநடாத்த தகுதியற்றவர் தமிழ் மொழி தொடர்பில் அவருக்கு போதிய அறிவு இல்லை என்றும் கூறினான்.

எரிகிற நெருப்பில் எண்ணெய் தெளிப்பது போல குறுக்கிட்ட இன்னுமொரு நண்பன் "ஆமாம் அவர் நேயர்கள் அனைவருக்கும்அன்பான வணக்கங்கள்"என்று சொல்கிறார்.அதுவும் பொருத்தமற்றது. ஒருவரால் ஒரே நேரத்தில் வணக்கம் என்றுதான் கூற் முடியுமே தவிர வணக்கங்கள் என்று சொல்ல முடியாது என்றான்.

சும்மா ஒரு வார்த்தை அவரைப்பற்றி குறையாக சொன்னாலே பொங்கி எழும் எனக்கு இந்த கடும் வார்த்தைகள் கடல்சுனாமியாய் சுழற்றி அடிக்க தூண்டியது. ஆனாலும் கொஞ்சம் அறிவு பூர்வமாய் aணுக நினைத்து முதலாவது நண்பரிடம் "சரி நீங்கள் அந்த அறிவிப்பாளர் தவறாக செல்வதாக சொல்கிறீர்கள் அப்படியானால் மற்ற வானொலியில் எப்படி சொல்கிறார்கள் என்று கேட்டேன்.

நண்பர் ரொம்ப கூலாக "ஒன்பது மணி இருபது நிமிடங்கள்" என்று சொல்கிறார்கள் என்றார்.

நல்லது நம்ம குருநாதர் அதனை ஒன்பது மணி இருபது நிமிடம் என்று சொல்கிறார் அப்படித்தானே என்றேன்.

"ஆமாம் "பதில் தந்தார் நமது நண்பர்.

"நண்பரே இருபது நிமிடம் என்பதை இருபது நிமிடங்கள் என்று பன்மையில் சொல்லவேண்டும் என்றால் ஒன்பது மணியும் ஒன்பது மணிகள் என்றுதானே சொல்ல வேண்டும்."

-----------

மௌனித்து விட்டார் நண்பர்.

இனி அடுத்த நண்பரின் வணக்கங்கள் தொடர்பில் நியாயப்படுத்த நினைத்து அவரிடம், "ஒரு அறிவிப்பாளர் வானொலியில் அறிவிப்பு செய்யும்போது ஏராளமான நேயர்கள் வானொலியை கேட்பார்கள். எனவே ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வணக்கம் சொல்ல வேண்டும். ஆனால அது முடியாத காரியம். எனவே எல்லோருக்கும் சொல்கின்ற வணக்கம்+வணக்கம்+வணக்கம்-----=வணக்கங்கள் என்றேன். அந்த நண்பரும் மௌனித்து விட்டார். இனி என்ன எல்லோரும் மௌனித்து விட்டால் நாங்கள்தானே அறிவாளி.(வேடிக்கை...)

உண்மையில் இந்த கருத்து மோதலில் (விவாதம் என்று சொல்லவில்லை அதற்கான தன்மைகளில் இருந்து இது௭ கொஞ்சம் மாறுபட்டிருந்தது.) இருந்து சில சிந்தனைகள் தலைதூக்கின. அவைதொடர்பில் பிற்பட்ட காலங்களில் கொஞ்சம் தேடத்தொடங்கினேன். இதன் பலனாக சில முடிவுகள் கிடைத்தன. அதாவது வானொலி அறிவிப்பின்போது மிகவும் நுணுக்கமாக எதனையும் கருதுவது கடினம். வானொலி என்பது கொஞ்சம் நவீனத்துவம் அடைந்துள்ள காரணத்தினால்(தனியார் வானொலிகளின் வரவால்) அதனை இப்படித்தான் இருக்க வேண்டுமென வரையறை செய்துவிட முடியாது. அதற்காக அறிவிப்பின் ஆரம்ப கால கட்டமைப்பை முற்றாக சிதைத்துவிடவும் கூடாது/முடியாது.

எனவே நேர அறிக்கைகளை வழங்குகின்றபோது ஒன்பது மணி இருபது நிமிடங்கள் என்று சொல்வதிலும் தவறில்லை, ஒன்பது மணி இருபது நிமிடம் என்று சொல்வதிலும் தவறில்லை. அதே போன்றுதான் வணக்கம் வணக்கங்கள் என்ற விடயமும் உள்ளது.

No comments: