உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Friday, June 26, 2009

தமிழ் பேசுவோர் எல்லாம் தமிழர்?

இன்றைய நிலையில் இலங்கையை பொறுத்த வரையில் தமிழ் மொழியை பேசுகின்ற அனைவரையும் தமிழ்ர்கள் என்று அழைக்கின்ற ஒரு நாகரீகத்தை அரசியல் நோக்கத்திற்காக அரசியல் ஆய்வாளர்களும், அரசியல்வாதிகளும் உருவாக்கிவருகின்றார்கள். அதாவது தமிழ் பேசும் முஸ்லீம்களை "தமிழ்ர்கள்" என்று அழைக்கின்றார்கள். உண்மையில் அது தவறு என நான் நினைக்கின்றேன். முஸ்லீம்கள் என்பவர்கள் தானித்துவமான ஒரு இனத்தினர். தமிழ் மொழியை பேசுகின்ற ஒரே காரணத்திற்காக அவர்களை தமிழ்ர்கள் என அடையாளப்படுத்த முடியாது. நீண்ட வரலாறும், தொன்மையான ஒரு கலாசாரமும் உள்ள இனமான முஸ்லீம் இனத்தை அரசியல் தேவைகளிற்காக தமிழ்ர்கள் என அடையாளப்படுத்துவது , எதிர்காலத்தில் முஸ்லீம் என்று ஒரு இனம் இலங்கையில் வாழ்ந்த வரலாற்றை அடியோடு அழித்து வடும் என்பது மட்டுமன்றி , இரு இனங்களை ஒன்ராக்கும்போது கலாசார ரீதியான குழப்பங்களும் ஏற்படலாம். அதாவது தமிழர் என்றால் அவர்களிற்கும் ஒரு தனித்துவமான கலாசாரம், விழுமியம், ஒழுக்கம் இருக்கின்றது. இந்த இன ஒன்ருபடுத்தலால் இரு வழி கலாசாரம் ஒன்று உருவாகி அது தமிழ்ரின் தனித்துவங்களையும் சிதைக்கவே செய்யும்.

பிரித்தானிய காலனித்துவ காலத்தில் பிரித்தானியர் முஸ்லீம்களையும் தமிழார்களாக கருதி அவர்களிற்கான பிரதிநிதுத்துவத்தையும் தமிழ்ர்களின் பிரதிநிதிதுவத்துக்குள் அடக்கியிருந்த காரணத்தினால்தான் அதில் இருந்து வெளியே வருவதற்காக அன்றைய முஸ்லீம் முக்கியஸ்தர்கள் அரும்பாடுபட்டார்கள். இதனால்தான் அன்றைய தமிழ் தலைமைகளுக்கும், முஸ்லீம் முக்கியஸ்தர்கலுக்கும் இடையில் மனக் கசப்புக்கள் உருவாகி பின்னர் அது தமிழர் தலைமைகள், சிங்கள தலைமைகளுக்காக பரிந்து பேசுகின்ற சூழ்நிலைக்கு இட்டுச்சென்றது எனலாம். ஆக இவ்வாறான ஒரு இன ஒன்று படுத்தலை செய்வதென்பது எதிர்கால தமிழ், முஸ்லீம் சந்ததிகளையும் பாதிக்க இடம் உண்டு. ஒரு வேளை இன்றைய அரசியல் தேவையாக "தமிழ் பேசுகின்ற முஸ்லீம்களை தமிழ்ர்கள்" என்று அடையாளப்படுத்துவது இருக்கலாம். ஆனால் எதிர்காலங்கள் தொடர்பில் பல குழப்பங்களையும் ,சிக்கல்களையும் ,ஆரோக்கியமற்ற மாறுதல்களையும் இந்த கைங்கரியம் உண்டாக்கும் என்பதை ஒவ்வொரு தமிழ்னும், முஸ்லீமும் உணர்ந்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் இன்று உலகில் உள்ள குழப்பங்களுக்கு காரணம் அரசியல் தேவை கருதி அவ்வப்போது எடுக்கப்படும் தூர நோக்கற்ற முடிவுகளே என்பதில் ஐயமில்லை. எனவே தமிழ் பேசுகின்றார்கள் என்பதற்காக முஸ்லீம்களை தமிழ்ர்கள் என்று அழைப்பதை நிறுத்தி விட்டு, "அரசியலுக்காக மட்டும்" தமிழ் பேசும் மக்கள் என்ற பதத்தை பிரயோகிக்கலாம் என எண்ணுகிறேன்....

குறிப்பு-ஒவ்வொருவனும் "இனம்" என்ற பற்றுறுதியுடன் இருக்க வேண்டும் என கருதியே இதனை பதிந்துள்ளேன், அன்றி யார் மனதையும் புண்படுத்தவோ அல்லது அரசியல் ரீதியான முன்னெடுப்புக்களுக்கு குந்தகம் விளைவிக்கவோ அல்ல. மகாகவி சுப்ரமணியபாராதியார் கூட "சாதிகள் இல்லையடி பாப்பா" என்று பாடினார் , தவிர இனங்கள் இல்லையடி பாப்பா என்று பாடவில்லை.

No comments: