உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Sunday, February 7, 2010

கிரிக்கட்....கிரிக்கட்.....கிரிக்கட்.....

இந்திய-தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் நடைபெற்று வருகின்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நிறைவின்போது தனது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்துள்ள இந்திய அணி இலக்கு இழப்பின்றி 25 ஓட்டங்களை பெற்றுள்ளது. அந்தவகையில் இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி முதலாவது இனிங்ஸில் 6 இலக்குகளை இழந்து மொத்தமாக 558 ஓட்டங்களை சேர்த்த நிலையில் ஆட்டத்தை இடை நிறுத்தி இந்திய அணியைத் துடுப்பெடுத்தாட அழைத்திருந்தது.

அந்தவகையில் தென்னாபிரிக்க அணி சார்பாக முதலாவது இனிங்ஸில் மிகவும் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய ஹசிம் அம்லா 473 பந்து வீச்சுக்களில் 22 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 253 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இது ஹசிம் அம்லா சர்வதேச டெஸ்ட் கிரிக்கட்டில் பெறும் முதலாவது இரட்டைச் சதமாகும். இதற்கு முன்னர் நியுசிலாந்திற்கு எதிராக கடந்த 2007 நவம்பரில் பெற்ற 176 ஓட்டங்களே ஹசிம் அம்லாவின் அதிகூடிய சர்வதேச டெஸ்ட் கிரிக்கட் ஓட்டமாக அமைந்திருந்தது.
ஹசிம் அம்லாவின் அதிரடிக்கு துணையாக தென்னாபிரிக்க அணியின் மற்றுமொரு வீரரான ஜக் கலிசும் தன பங்கிற்கு அசத்தியிருந்தார். அந்தவகையில் மொத்தமாக 351 பந்துவீச்சுக்களை எதிர்கொண்ட ஜக் கலிஸ் 15 நான்கு ஓட்டங்கள் 2 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக மொத்தமாக 173 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். ஜக் கலிஸ் தனது சர்வதேச டெஸ்ட் கிரிக்கட் அரங்கில் பெறும் 34 ஆவது சதம் இதுவாகும்.ஹசிம் அம்லா, ஜக் கலிஸ் ஆகியோருக்கு அடுத்தபடியாக தென்னாபிரிக்க அணி சார்பாக AB டிவிலியஸ் 88 பந்துவீச்சுக்களில் 5 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 53 ஓட்டங்களைப் பெற்றார். இது டிவிலியசின் 21 ஆவது அரைச் சதமாகும்.

தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டம் இவ்வாறு அமைய இந்திய அணி சார்பாக சஹீர்கான் 31ஓவர்கள் பந்து வீசி 7 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 96 ஓட்டங்களைக் கொடுத்து 3 இலக்குகளை வீழ்த்தியதுடன் ஹர்பஜன்சிங் 46 ஓவர்கள் பந்து வீசி 1 ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 166 ஓட்டங்களைக் கொடுத்து 2 இலக்குகளை வீழ்த்தியிருந்தார். மேலும் வீரேந்திர ஷேவாக் 1 இலக்கை வீழ்த்தினார். அமித் மிஷ்ரா இந்தப் போட்டியில் இந்திய அணி சார்பாக முதலாவது இனிங்க்சில் அதிகூடிய ஓவர்கள் (53 ) பந்துவீசியபோதிலும் ஒரு இலக்கைத்தானும் வீழ்த்தவில்லை.

இவ்வாறாக தென்னாபிரிக்க அணியின் முதலாவது இனிங்ஸ் நிறைவடைய தன்னுடைய முதலாவது இனிங்சை ஆரம்பித்த இந்திய அணி இன்றைய ஆட்ட நேர முடிவின்போது இலக்கு இழப்பின்றி 4 ஓவர்கள் நிறைவின் போது 25 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. அந்தவகையில் இந்திய அணியின் சார்பில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களம் புகுந்த கம்பீர் 12 ஓட்டங்களையும், வீரேந்திர ஷேவாக் 9 ஓட்டங்களையும் பெற்ற நிலையில் களத்திலிருந்தார்கள்.

இந்திய தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் நிலைவரம் இவ்வாறு இருக்க இன்றைய தினம் மேற்கிந்தியத் தீவுகள்- அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் சர்வதேசப் போட்டித்தொடரின் முதலாவது போட்டி இன்றைய தினம் மெல்பேர்னில் நடைபெற்றது. இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடக் களம் புகுந்த அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 இலக்குகளை இழந்து 256 ஓட்டங்களைப் பெற்றது.

அவுஸ்திரேலிய அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் வொட்ஷன் 74 பந்துவீச்சுக்களை எதிர் கொண்டு 3 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 59 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். வொட்ஷன் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் பெறும் 12 ஆவது அரைச் சதம் இதுவாகும். இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் அணித்தலைவர் ரிக்கிப் பொண்டிங் ஒரு ஓட்டத்தால் அரைச்சதம் பெறும் வாய்ப்பை தவறவிட்டிருந்தார்.

மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் பொல்லர்ட் 10 ஓவர்கள் முழுமையாக பந்துவீசி 45 ஓட்டங்களைக் கொடுத்து 3 இலக்குகளையும், ரவீந்திரநாத் ராம்பவுல் 8 ஓவர்கள் பந்துவீசி 43 ஓட்டங்களைக் கொடுத்து 2 இலக்குகளையும் கைப்பற்றியிருந்தார்கள். மேலும் ஜமால் ரொயச், கெயில் ஆகியோர் தலா ஒவ்வொரு இலக்குகளை வீழ்த்தியிருந்தார்கள்.

அந்தவகையில் 50 ஓவர்களில் 257 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்கின்ற இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் 34 .2 ஓவர்கள் நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 143 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக பந்துவீச்சில் கலக்கிய பொல்லர்ட் 35 பந்து வீச்சுக்களில் 3 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 31 ஓட்டங்களைப் பெற்றார். வேறு எந்தவொரு மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரரும் 30 ஓட்டங்களைக் கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா சார்பில் ஜேம்ஸ் ஹர்ரிஸ் 9 ஓவர்கள் பந்து வீசி 1 ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 24 ஓட்டங்களைக் கொடுத்து 3 இலக்குகளையும், ஹயுரிட்ஸ் 6 .2 ஓவர்கள் பந்து வீசி 28 ஓட்டங்களைக் கொடுத்து 3 இலக்குகளையும் வீழ்த்தியிருந்தார்கள். மேலும் பொலிங்கர் 2 இலக்குகளையும் ஜோன்ஷன், வொட்ஷன் ஆகியோர் தலா ஒவ்வொரு இலக்குகளையும் வீழ்த்தியிருந்தார்கள்.

அவுஸ்திரேலிய அணி 113 ஓட்டங்களினால் வெற்றியீட்டிய இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்திரேலிய அணி சார்பில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதுடன், பந்து வீச்சிலும் ஒரு இலக்கை வீழ்த்திய வொட்ஷன் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இரு நாடுகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டி எதிர்வரும் 9 ஆம் திகதி அடிலைட்டில் இடம்பெறவுள்ளது.

*************
நேற்றைய எனது பதிவில் பாகிஸ்தான் அணியின் சைட் அஃப்ரிடி பந்தக் கடித்த விவகாரத்தில் ஒரு விடயத்தை தவறவிட்டுவிட்டேன் அதாவது அஃப் ரிடியின் இந்தச் செயலுக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவரான இன்சமாம் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். மேலும் அவர் அணித் தலைவர் பதவியைப் பறிகொடுக்கும் நிலையில் உள்ள பாகிஸ்தான் அணித்தலைவர் முஹம்மத் யூசுஃப்பிற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

***********
இன்னுமொரு விடயம், பங்களாதேஷ்- நியுசிலாந்து அணிகளிற்கிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளைக் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி நாளை டுனேடினில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே முதலாவது போட்டியில் தோல்வியடைந்த பங்களாதேஷ் இந்தப் போட்டியில் வென்றால்தான் தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்கின்ற நிலையிலும், ஏற்கனவே முதலாவது போட்டியில் வென்ற நியுசிலாந்து நாளைய போட்டியில் வென்றால் தொடரைக் கைப்பற்றிவிடலாம் என்கின்ற நிலையிலும் பலப்பரீட்சை நடாத்தவுள்ளன.

Saturday, February 6, 2010

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்.!!!!

ஒரு பக்கம் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், இன்னுமொரு பக்கம் ஐ.பி.எல் பரபரப்பு, பாகிஸ்தான் அவிஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடை பெற்ற போட்டிகள் பற்றிய சந்தேகங்கள், வினோத நிகழ்வுகள் என்று அரசியல் உலகைப் போலவே விளையாட்டு உலகமும் களைகட்டிக் கொண்டிருக்கின்றது.

மேலும் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ள இந்திய-தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரும் விளையாட்டுப் பிரியர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இந்தப் போட்டியில் டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடிக்கும் இலக்குடன் தென்னாபிரிக்க அணியும் தற்போதுள்ள முதலிட அந்தஸ்த்தை தக்க வைக்கும் கட்டாயத்தில் இந்திய அணியும் மோதுகின்றமை போட்டியின் சுவாரசியத்தை அதிகரித்துள்ளது.

அத்துடன் பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியும் இன்னுமொரு பலம் பொருந்திய அணியான இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை சமநிலை செய்த நிலையில் தென்னாபிரிக்க அணியும் மோதுகின்றமையும் கவனத்திலெடுக்கத்தக்கது.தென்னாபிரிக்க அணியைப் பொறுத்தவரையில் அதன் பயிற்சியாளர் ஆர்தர் பதவி விலகிய நிலையிலும், தெரிவுக் குழு கலைக்கப்பட்ட நிலையிலும் இந்திய அணியை எதிர்கொள்கின்றது.

அந்தவகையில் இன்று நாக்பூர் மைதானத்தில் ஆரம்பித்த இந்திய-தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி முதல்நாள் ஆட்ட நிறைவின் போது இரண்டு இலக்குகளை இழந்து 291 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அந்த வகையில் ஹசிம் அம்லா ( 115 ) , ஜக் கலிஸ் (159 ) ஆகியோர் ஆட்டமிழக்காமல் சதம் கடந்த நிலையில் களத்திலுள்ளார்கள்.


இன்றையதினம் வீழ்த்தப்பட்ட இரண்டு இலக்குகளும் சஹீர்கானால் வீழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்ட நேர முடிவின் போது தென்னாபிரிக்க அணி மிகவும் வலுவான ஒரு நிலையை எட்டியுள்ளது.

இந்திய- தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான தொடர் இவ்வாறு இருக்க நடைபெற்று முடிந்த பாகிஸ்தான்-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை 0 -3 எனப் பறிகொடுத்ததுடன், ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை 0 -5 எனப் பறிகொடுத்த பாகிஸ்தான் இறுதியாக வெற்றிகொள்ளும் என்று எதிர்பார்த்த 20 -20 சர்வதேசப் போட்டியிலும் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்துள்ளது.



இந்தத் தோல்விகள் குறித்த சந்தேகங்கள், கேள்விகள் பல தொடர்ந்து எழுந்தவண்ணமுள்ளன. இதன் விளைவாக பாகிஸ்தான் அணிக்கு இனி ஒருபோதும் பயிற்சியளிக்கமாட்டேன் என்று அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான வக்கார் யூனிஸ் சொல்லியுள்ளார். மேலும் தோல்விக்கு கிரிக்கெட் அல்லாத காரணங்கள் இருபதாகக் கூறும் வக்கார் யூனிஸ் இது குறித்து முறையான விசாரணை தேவை என்று கூறியதோடு, இந்த உண்மைகளை விளையாட்டுத்துறை நாடாளுமன்றக் குழுவிடம் மட்டுமே வெளிப்படுத்துவேன் என்றும் கூறியுள்ளார்..
இந்த உண்மைகளை கமிட்டி முன்னால் கூறினால்தான் நடந்தது பற்றி பொதுமக்களுக்கு தெரியவரும்மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதும் தெரியவரும் என்று அவர் சொல்லியுள்ளார்..

இது ஒரு புறமிருக்க பாகிஸ்தான்-அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்று முடிந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியில் சைட் அஃப்ரிடி பந்தைக் கடித்த விவகாரம், மற்றும் ரசிகர் ஒருவர் ஆடுகளத்துக்குள் புகுந்து களத்தடுப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கலீத் லத்தீவை கட்டிப் பிடித்து தள்ளிய விவகாரம் என்பவற்றின் பரபரப்பு இன்னும் குறைந்ததாகத் தெரியவில்லை.



அந்தவகையில் அஃப்ரிடி தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டபோதிலும் பாகிஸ்தானின் முன்னாள் அணித்தலைவர்கள் இருவரும், அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர் ஒருவரும் அஃப்ரிடிக்கு ஆதரவாக எல்லா பந்துவீச்சாளர்களும் பந்தை சேதப்படுத்துவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்கள். மேலும் ரசிகர் ஆடுகளத்துக்குள் புகுந்த விவகாரம் தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கட் சபையிடம் அவுஸ்திரேலிய கிரிக்கட் சபை மன்னிப்புக் கோரியிருக்கிறது.

பரபரப்பான இந்த விடயங்கள் ஒரு புறமிருக்க ஐ.பி.எல் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்கள் சேர்த்துக் கொள்ளப்படாமை குறித்து பாகிஸ்தானிய வீரர்கள் தங்கள் அதிர்ப்தியை அண்மையில் வெளியிட்டிருந்தார்கள். இதனைத் தொடர்ந்து சில பாகிஸ்தானிய வீரர்களுக்கு ஐ.பி.எல் போட்டிகளில் வாய்ப்பிருப்பதாக ஐ.பி.எல் அமைப்பின் தலைவர் லலித்மோடி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஐ.பி.எல் போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய வீரர்கள் பங்குபற்றுவதை இந்தியாவில் பால்தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி கடுமையாக எதிர்த்து வருகின்றது.

இதன்காரணமாக அவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்க வீரர்கள் ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து விலகக் கூடுமென செய்திகள் வெளிவந்திருந்தாலும் தற்போது சில பாதுகாப்பு அறிவுறுத்தல்களின் அடிப்படையிலும், தற்போது தென்னாபிரிக்கா இந்திய மண்ணில் விளையாடிவருவதன் அடிப்படையிலும் மேற்படி இரு நாடுகளின் வீரர்களும் ஐ.பி.எல் போட்டிகளில் பங்குபற்றுவார்கள் என்றே தெரிகின்றது.

மேலும் கொல்கத்தா நைட் ரேடர்ஸ் பாகிஸ்தான் வீரர்களை ஏலம் எடுத்தால் கொல்கத்தா நைட் ரேடர்ஸ் அணியின் உரிமையாளரும், பிரபல நடிகருமான ஷாருக்கானின் ""மை நேம் இஸ் கான்"" என்ற திரைப்படத்தை புறக்கணிக்கப்போவதாகவும் சிவசேனா எச்சரித்துள்ளது. இருப்பினும் இந்த எச்சரிக்கைகளுக்கு அடிபணியப் போவதில்லை என்று ஷாருக்கான் தரப்பிளிரிந்து பதில் வந்திருக்கின்றது.


இவ்வாறாக அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ஐ.பி.எல் போட்டிகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் ஒரு டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன் ரசிகர்களை ஈர்க்க இருபது ஓவர் கிரிக்கெட்டை பயன்படுத்துங்கள், அதனை அதிகமாக பயன்படுத்தி ஓவர் டோஸ் கொடுக்காதீர்கள் என்று இருபது ஓவர் கிரிக்கெட்டை கண்டுபிடித்த ஸ்டூவர்ட் ராபர்ட்சன் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்.

ஆக மொத்தம் அஃப்ரிடியின் மன்னிப்பு, அவுஸ்திரேலிய கிரிக்கட் சபையின் மன்னிப்பு, ஸ்டூவர்ட் ராபர்ட்சனின் இந்தக் கருத்து எல்லாமே கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமோ என்று எண்ணத் தோன்றுகின்றது...