உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Monday, June 1, 2009

வடக்கிலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டது தவறா?

இந்த பதிவை பார்க்கும் பெரும்பாலானவர்கள் என்னை ஒரு இனவாதியாக சித்தரிக்க முயலலாம். பரவாயில்லை யார் அப்படி சித்தரித்தாலும் நான் எப்படியானவன் என்பதை எனது உள்ளம் அறியும்.

இன்று பெரும்பாலான ஆய்வாளர்கள் புலிகள் செய்த தவறுகள் தொடர்பில் தங்கள் கருத்துக்களையும் ஆய்வுகளையும் வெளியிட்டு வருகிறார்கள். அந்தவகையில் வடக்கிலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றியமை புலிகளால் செய்யப்பட்ட தவறு என்று சுட்டிக்காட்ட தலைப்பட்டுள்ளார்கள். ஒரு மனிதாபிமான கண்ணோட்டத்தில் பார்க்கும்போது உண்மையில் யாரும் இதனை தவறு என்று ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் அரசியல் தூர நோக்கு பார்வையில் சிந்தித்தால் இதில் உள்ள பல்வேறு உண்மைகளை புரிந்து கொள்ளலாம். அதாவது இந்த நடவடிக்கையின் நன்மையை புரிந்து கொள்ள முடியும்.

உண்மையில் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டமைக்கு காரணம், சிங்கள தலைமைகள் வடக்கு வாழ் முஸ்லீம்களுக்கும், தமிழர்களிற்கும் இடையில் திட்டமிட்ட இன கலவரம் ஒன்றை ஏற்படுத்த இருந்த பின்னணியிலேயே இடம் பெற்றிருந்தது. அந்த வகையில் அப்படியான இனகலவரத்துக்கான ஆரம்ப கட்ட வேலைகளும் பூர்த்தியாக்கப்பட்டிருந்தன (பள்ளிவாசலில் ஆயுதங்கள் செகரிக்கப்பட்டமை அடங்கலாக). இவ்வாறான ஒரு சூழலில் வடக்கில் முஸ்லீம்களும், தமிழர்களும் ஒன்றாக வாழ்ந்திருந்தால் ஒரு பெரும் முஸ்லீம், தமிழ் இன கலவரம் வெடித்திருக்கும். இதனால் ஏராளமான முஸ்லீம், தமிழ் உறவுகள் கொல்லப்பட்டிருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அத்துடன் ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகத்திற்கும், தமிழ் சமூகத்திற்கும் இடையில் மாறாத பகை உணர்வு ஏற்பட்டிருக்க இடம் உண்டு. ஆகமொத்தம் புலிகளின் இந்த நடவடிக்கை ஒரு முஸ்லீம் தமிழ் இனக்கலவரத்தை தடுத்து நிறுத்தியது மட்டுமன்றி, பெரும்பாலான முஸ்லீம்களும், தமிழர்களும் ஒற்றுமையாக வாழ வழிசெய்திருக்கிறது. இப்போது சொல்லுங்கள்முஸ்லீம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டது தவறா?

No comments: