உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Tuesday, June 2, 2009

அலுவலகத்தில் நடந்த அந்த சுவாரசியம்.

அவசியம் கருதி அரசியல் பக்கம் கொஞ்சம் உலா வந்தாச்சு. (பரவாயில்லையே செந்தூரன் உனக்கும் கவிதை எழுத வரும் போல...) ஆமா அடுத்ததா என்ன பதியலாம் என்று யோசிச்சால் நம்ம அலுவலகத்தில நடந்த அந்த சுவாரசியத்த பதிஞ்சிடுவம்.. எந்த சுவாரசியம் என்று கேட்கிறீங்களா? அதுதான் முதல்ல சொன்னேனே பேய் பற்றி அலுவலகத்தில நடந்த சுவாரசியம் இருக்குதென்று அதத்தான் பதியப்போரன்...

வழக்கமாய் நிகழ்ச்சி செய்யும் போது கலையகத்துக்குள்ள கையடக்க தொலைபேசி பயன்படுத்த முடியாது. ஆனால் நாங்கள் இரவில் நிகழ்ச்சி செய்வதால் கண்காணிப்பு குறைவாக இருக்கும். இதனை பயன்படுத்தி கையடக்க தொலைபேசியை பயன்படுத்துவது வழக்கம். அன்றும் இப்படித்தான் எனது நிகழ்ச்சிக்காக அலுவலகத்தில் காத்துக்கொண்டிருந்த நேரம், கலையகத்தில் நிகழ்ச்சியில் இருந்த அறிவிப்பாளர் மிகவும் வேகமாக கீழ இறங்கி வந்தார். என்ன விஷயம் இப்பிடி வேகமாய் வாறீங்க? என்று கேட்டபோது, தனது கையடக்க தொலைபேசியில் சார்ஜ் இல்லை என்றும் என்னை கலையகத்துக்குள் வந்து தன்னுடன் இருக்குமாறும் அவர் அழைத்தார்.. சரி உங்க தொலைபேசியில் சார்ஜ் இல்லாததற்கும் நான் கலையகத்துக்குள் வந்து இருப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டபோதுதான் அந்த உண்மை தெரிய வந்தது.
அது என்ன உண்மை என்று கேட்கிறீங்களா?
அதாவது நம்ம அறிவிப்பாளருக்கு பேய் பயம் வந்துவிட்டது. சரி எப்பிடி திடீரென்று இந்த பயம் வந்திருக்கும் என்று பார்த்தால், எமது வானொலியில் இருந்து இன்னுமொரு உள்ளூர் தனியார் வானொலிக்கு இடம்மாறி கடமையாற்றும் ஒருவர் காலையில் அலுவலகத்திற்கு வந்திருக்கிறார். அவர் தமது வானொலி கலையகத்தில் உலாவும் பேய் கதை ஒன்றை எமது அறிவிப்பாளருக்கு சொன்னதுடன், எமது கலையகத்திலும் அவ்வாறான ஒரு பேய் உலாவியதாகவும் கூறியிருக்கிறார். இதனை எமது அறிவிப்பாளர் உண்மை என நம்புவதற்கு ஏற்றாற்போல எமது வானொலி நிலையம் அமைந்துள்ள இடத்திற்கு அண்மையில் ஆறு உடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் அவர் அதனை மிகவும் அதீதமாக நம்பிவிட்டார்.

இப்படி பயந்த நிலையில் இருந்த அந்த அறிவிப்பாளரின் நிகழ்ச்சி நேரம் முழுவதும் அவருடன் கலையகத்தில் உட்கார்ந்ததுடன், அன்று ஞாயிற்று கிழமை என்பதால் நானும் அந்த அறிவிப்பாளரும் மட்டுமே கலையகத்தில் இருந்தமையால், தனது நிகழ்ச்சி முடிந்தும் அவர் உறங்கும் அறைக்கு சென்று உறங்காமல், கலையகத்துக்குல்லையே உறங்கிவிட்டார். ஆமா அந்த அறிவிப்பாளர்தான் யார் என்று சொல்லல்லையே என்று நீங்கள் கேட்கிறது புரியுது....

No comments: