உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Sunday, June 14, 2009

காதலர்தினம்...

என்னடா காதலர் தினம்தான் முடிஞ்சு ரொம்ப நாளாச்சே என்று நீங்க யோசிக்கிறது புரியுது, ஆனாலும் இதை ஒரு சுவாரசியத்திற்காக பதியிறன். கடந்த காதலர் தினத்தை எமது வானொலியில் கொஞ்சம் அமைதியாகத்தான் கொண்டாடினோம்.(கொண்டாடினோம்=நிகழ்ச்சி செய்தோம்.)
அப்போது நேயர்களை இணைத்து கொள்ளும் வசதி இடைநிருத்தப்பட்டிருந்தமையால் என்னுடன் தொலைபேசியில் தொடர்பில் இருந்த நண்பர்களிடம் காதலை பற்றி ஏதாவது சொல்லுமாறு கேட்டேன். அவர்களுள் சிலர் காதலை பற்றியும் சிலர் தங்கள் காதலன், காதலி பற்றியும் சொன்னார்கள். அவற்றையே அன்றைய நிகழ்ச்சியின் சிறப்பாக்கினேன். அத்துடன் காதலர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?/காதலர் தினத்தை வலன்டைன் டே என அழைப்பதற்கான காரணங்கள் என்ன? போன்றவற்றையும் சேர்த்திருந்தேன். அவற்றில் சிலவற்றை பதிகின்றேன்...

காதலர்தினம் வலன்டைன் டே என அழைக்கப்படுவதற்கு மூன்று வெவ்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
ரோம் நகரில் 1500 வருடங்களிற்கு முன்னர் கிறிஸ்தவத்தை போதித்த இளம் பாதிரியார் வலன்டைன் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.இங்கு அவர் பார்வை இழந்த சிறை அதிகாரியின் மகளை ஜெபித்து பார்வை பெற செய்ததாகவும் இதனால், சிறை அதிகாரியின் மகள் பாதிரியார் மீது காதல் கொண்டதாகவும் எனினும் பாதிரியாரை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற முடியவில்லையாம். இதன் அடிப்படையில்தான் கார்தலர்த்தினத்தை வலன்டைன் டே என்று அழைப்பதாக ஒரு கதை சொல்கிறது.

ரோம் நாட்டில் கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்த கிளாடியஸ் என்பவர் படை வீரர்கள் திருமணம் செய்யக்கூடாது என்று கட்டளை இட்டிருந்தாராம். இதற்காக கி.பி 267 இல் போர்வீரர்களின் திறமையை திருமணம் பாதிக்கும் என சட்டம் இயற்றியிருந்தாராம். இருந்தபோதிலும் பாதிரியார் வலன்டைன் அவர்கள் இரகசிய திருமணத்தை படைவீரர்களுக்கு செய்து வைத்தார். இதனால் பாதிரியாரின் தலை சீவப்பட்டது. இவ்வாறு தலை சீவப்பட்ட நாளையே காதலர்தினம்/வலன்டைன் டே என்று கொண்டாடப்படுகின்றது என்று இரண்டாவது கதை சொல்கிறது..

ரோம் நகரில் லூபர் கேலியா விழா பெப்ரவரி மாதத்தில் கொண்டாடப்பட்டது. வசந்த காலத்தை காதலர்கள் வரவேற்கும் விழாவாகத்தான் இந்த லூபர் கேலியா கொண்டாடப்பட்டதாம். இதுதான் வலன்டைன் டே இன் ஆரம்பம் என்று மூன்றாவது கதை சொல்கிறது.

வலன்டைன் டே பற்றி மூன்று வெவ்வேறு கதைகள் சொல்லப்பட்டாலும், இந்த கதைகளின் அடிப்படையில் வலன்டைன் டே என்பது ரோம் நகரத்திலையே தோற்றம் பெற்றது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இனி நண்பர்களின் காதல்பற்றிய கருத்துக்கள்...

மனங்களின் சங்கமம் காதல்..

ஜென்ம ஜென்மமாய் தொடரும் உன்னத உணர்வு காதல்...

தினம் தினம் தீபாவளி காதல் கொண்டால் பிறக்கும் புது வழி...

இலக்கணம் சில நேரம் பிழையாகலாம் நான் உன்மேல் கொண்ட காதல் தடம் மாறாது...

நீண்ட நினைவு ஏடுகளின் பசுமையான பக்கங்கள் காதல்நினைவுகள்....

சலனம் இல்லா உணர்வுகள் சந்திக்கும் இடம் காதல்......

உலகம் உருள்வதே உயரிய காதலினால்தான்...

கல்லைக்கூட கனிய வைக்கும் காதல் சொல்லில் அடங்குமா?

ஆயிரம் ரோஜாக்களை அடுக்கினாலும் காதல் முன்னே அவை அடிபட்டுவிடும்...

பொன் நிறம் மாறினால்லும் என் காதல் அழியாது...

வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையில் உருளும் உருவமில்லா உருண்டை காதல்....

பால் போல என்மனம் பார்ப்பவர் எல்லாம் போற்ற காரணம் காதல்.......

ஜாதி மத பேதம் காதலுக்கு இல்லை ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லை......

காதல் தோற்பதில்லை காதலர்கள்தான் தோற்கிறார்கள்....

அன்பு, பாசம் என்ற சொற்கள் எல்லாம் காதல் என்ற சொல்லின் முன்னே தோற்றுவிடும்...

என் நெஞ்சில் உள்ள காதல் தீ என்றுமே அணையாது...

சித்திரம் தோற்றுவிடும் என் காதலியின் சிரிப்பின் முன்னே.....

புன்னகை ததும்பும் என் நிலவான காதலியின் அன்பிற்கு நான் அடிமை....

ஆழமான காதல் அழியாத உணர்வு....

நினைவுகளால் நிரப்பப்படும் காதல் நீ இல்லை நான் இல்லை....

உன் விம்பம் என் விழித்திரைக்கு அழக்கூட்டும் ஒளிப்படம் காதலே நீ வாழ்க....

சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையில் பாதி பலம். காதல் கொண்டால் என்றுமே பலம்........

மனசே மனசே உனக்கு நன்றி என் மணாளன் குடியிருக்கும் மனசே உனக்கு நன்றி......

காதல்-சொற்களால் வர்ணிக்க முடியாத சுகம்....

காதல் இல்லாத வாழ்வு காற்று இல்லாத பூமி.....

உயிரில் கலந்து உடலில் புகுந்து உணர்வுகளோடு சங்கமிக்கும் உன்னதம் காதல்......

உலகை ஆட்சி செய்யும் உண்மையான உணர்வு காதல்......

இதயம் இடம்மாறும் தருணம் காதல் உருவாகும் காலம்.....

காதல் ஒரு வேதம் கற்க கற்க இனிக்கும்.....

சிற்பங்கள் சில நேரம் அழிந்து போகலாம் உண்மை காதல் உலகம் உள்ளவரை அழியாது.....

அலங்காரம் அரங்க்கத்திட்கும் அங்கத்திற்கும் மட்டும்தான் அழகு சேர்க்கும். காதல் அகத்திற்கும் முகத்திற்கும் அழஅகு சேர்க்கும்...

விடை தேட முடியா புதிர் காதல். காதல் ஒரு இனிய அனுபவம்....

நித்தம் நித்தம் நெஞ்சுக்குள் கொஞ்சும் மழலை முத்தம் காதல்.....

கனவுகள் எல்லாம் கருணையாகும். பார்வைகள் எல்லாம் பசுமையாகும்.....

கண்கள் சந்திக்கும்போது காதல் உருவாகும்......

No comments: