உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Wednesday, July 1, 2009

முடியும்.. உன்னால்...முடியும்....

இன்னும் பல லட்சம் ஆண்டுகளில்
தமிழ் மொழி அழிந்துவிடுமாம்
அதன் பின்....
அனைவர் உதடும் ஆங்கிலம் உச்சரிக்குமாம்..
தமிழ் மொழிக்கு வர இருக்கும்
இந்த அவல நிலை பற்றி சிந்தித்தபோது...

தமிழ் மொழிக்கு இன்றுதான் இறுதி மூச்சு..
நாளை முதல்
முக்கனி சுவைகொள் முத்தமிழ்
ஆங்கில ஆப்பிளிற்க்குள் அடக்கப்படும்..
சங்கம் வைத்து காத்த செந்தமிழ்
சாமாதிக்குள் சங்கமமாகும்...

இனி,
தமிழ் அகராதிகள் அதிகாரம் இழக்கும்....
ஆங்கில அகராதிக்கு தமிழன் அடிமையாகுவான்..
ஆங்கில பத்திரிகைகள்
தமிழன் கரங்களை அலங்கரிக்கும்..
தமிழ் பத்திரிகைகள்
நிரந்தர நித்திரை செய்யும்..
தமிழ் இலக்கியங்கள்
இலட்சணம் இழக்கும்...
ஆங்கில இலக்கியங்களை
ஆர்வத்துடன் கற்பான்
தமிழ் மொழி மறந்த தமிழன்...

நாளை முதல்
தமிழ் ஊடகங்கள்
தங்கள் கடந்த கால தவறுகளால்
தகுதி இழந்து தவிப்பர்...
மெல்லினிய தமிழ் மொழியின் பிரிவால்
காற்றலைகள் கனத்த கவலை கொள்ளும்...
தமிழ்ற்காய் உழைத்த தவப்புதல்வர்கள்
தமிழர் மனங்களில் மறக்கப்பட்டு விடுவார்கள்....

தமிழா!
இன்றுதான் உன் தாய்மொழிக்கு
இறுதி மூச்சு...
நாளை முதல்
உன் தாய்மொழியாம்
தமிழ் மொழி அழிந்துவிடும்..
அதன் பின்
மாற்றான் தாயிடம்
மொழிப்பிச்சை கேட்டு மண்டியிடப்போகின்றாய்..
அது சரி.. தமிழனே!
மரணிக்கும் உன் செம்மொழியின்
நீண்ட தொன்மையை
எப்படி உன்னால் ஆங்கிலத்திற்குள்
அடக்கி தொகுக்கமுடியும்?

ஓ... தமிழனே!
இன்று நீ வாழ்விடம் இழந்து தவிக்கும்
அகதி மட்டும்தான்.. ஆனால்
நாளை முதல்
தாய்மொழி இழந்து தவிக்கும்
அகதியும் ஆகப்போகின்றாய்..

கூடாது தமிழா.. கூடாது..
எந்த மொழி அழிந்தாலும்
எங்கள் மொழி அழிந்துவிடக்கூடாது...
விழித்திடு தமிழா விழித்திடு...
தமிழா உன் மொழிக்குள் ஊடுருவியிருக்கும்
ஒவ்வொரு பிற மொழயும்
ஒவ்வொரு வைரசுகள்..
முதலில் அவற்றை களையெடு..
நீ இலக்கியங்கள் புனைய தேவையில்லை..
இறந்து போகும் நிலையில்
இருக்கும் உன் மொழி இலக்கியங்களை
புதிய அச்சேற்று..
முடியும் உன்னால் முடியும்..
நீ உலக வரலாறுகளையே மாற்றியமைக்கும்
வல்லமை படைத்த மறத்தமிழன்..


பிற்குறிப்பு: கவிப்பேரரசு வைரமுத்துவின் பூமிக்கு வர இருக்கும் கடைசி பகல் என்ற கவிதையின் பாதிப்பே இதனை எழுத தூண்டியது

No comments: