உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Wednesday, June 3, 2009

அந்த ஐந்து பாடல்கள்!

பொதுவாக கல்லூரி காலம் என்பது பசுமையான ஒன்றாகவும் என்றும் மறக்க முடியாத இனிய அனுபவங்களை கொண்டதாகவும் பலருக்கும் அமைவதுண்டு. அந்த வகையில் அவ்வாறான நினைவுகளை மீட்டி பார்ப்பதில் ஒரு தனி இன்பம் கிடைப்பது என்னவோ மறுக்க முடியாத உண்மைதான். கல்லூரியில் செய்யும் குழப்படிகளும், சேஷ்டைகளும் வித்தியாசமானவையாக இருக்கும். அதிலும் மிகவும் சிறிய பராயத்தில் செய்த குழப்படிகளை நினைத்தால் சிரிப்புத்தான் வரும்.. கல்லூரியில் கிடைக்கின்ற நட்புக்களும் சரி, காதலும் சரி எல்லோருக்குமே கடைசிவரை கூட வருவதில்லை என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எனக்கு கல்லூரி வாழ்விலும், பள்ளி வாழ்விலும் பல நண்பர்கள், தோழிகள், சகோதரிகள், சகோதரர்கள் கிடைத்தார்கள். ஆனால் இப்போது அருகில் இருக்கும்/தொடர்பில் இருக்கும் அந்த உறவுகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். இருந்தாலும் என்னோடு ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் கற்ற அந்த உறவுகளை எப்போதும் மதிக்க தவறுவதில்லை. இதற்கு கல்லூரி வாழ்வில் நடந்த இனிய அனுபவங்களை காரணமாக சொல்லலாம். அதாவது அந்த அனுபவங்களினால் பல நண்பர்கள், நண்பிகள், சகோதரர்கள், சகோதரிகள் கண்முன்னே காட்சி தருவார்கள். அவ்வாறான இனிய அனுபவங்களை பகிரும் நோக்குடன் சில பதிவுகளை பதிய எண்ணி உள்ளேன். அந்த வகையில் முதலில் "அந்த ஐந்து பாடல்கள்" என்னும் இப்பதிவு வருகிறது...

அது ஒரு கார்த்திகை மாதம், நாங்கள் உயர்தரம் படித்து கொண்டிருந்த காலம். கல்லூரியில் ஒலி விழா நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. (எமது கல்லூரியில் அதிகமாக இந்து சமய மாணவர்களே கற்றாலும் எல்லா சமய விழாக்களும் முன்னெடுக்கப்படுவது வழாக்கம். பெளத்தம்,இஸ்லாம் இல்லை.) இதற்காக எமது வகுப்பின் சார்பில் நிகழ்ச்சிகள் செய்ய வேண்டி இருந்தது. என்ன செய்யலாம் என்று சிந்தித்த போதுதான் எமது வகுப்பின் மகளீர் அணியினால் அந்த யோசனை முன்வைக்கப்பட்டது. அதாவது ஒரு இசை நிகழ்ச்சியை நடாத்துவது என்ற யோசனை...
உண்மையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் நாங்கள் அனைவரும் ஒரு மிகப்பெரிய நகச்சுவையகவே நோக்கினோம். ஏனெனில் எம்மிடம் போதிய இசைக்கருவிகள் இல்லை, தவிர அப்படி இருந்தாலும் அந்த இசைக்கருவிகளை வாசிக்க யார்தான் இருக்கிறார்கள்? சிரிப்போ சிரிப்பு... இதைவிட பெரிய நகைச்சுவை இருக்க வாய்ப்பில்லை என்ற சிரிப்பு .....
ஆனால் அது நகைச்சுவை அல்ல அது ஒரு யதார்த்த சிந்தனை/யோசனை என்பதை எமது வகுப்பு சகோதரிகள் நிரூபித்தார்கள்... ஆம் கடுமையான பயிற்சி, கடுமையான உழைப்பு இவற்றால் அரங்கேறியது எமது வகுப்பு சகோதரிகளின் இசை நிகழ்ச்சி..
அடியேன் அதில் டோலக் வாத்திய கலைஞன், மற்றுமொரு மேடையில் அறிவிப்பாளன்.. அந்த நிகழ்ச்சியில் பாடப்பட்ட பாடல்களின் எண்ணிக்கை ஐந்து. அந்த பாடல்களை இன்றும் வானொலியில் ஒலிபரப்பு செயும்போது/ வானொலிகளில் கேட்கும்பொது கல்லூரி ஞாபகங்கள் வந்து போகும். அத்துடன் இந்த பாடல்களின் வரிகளை கூட மிகவும் திறமையான முறையில் எமது கல்லூரி வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் மாற்றியிருந்தார்கள். அது மட்டுமன்றி குறித்த அன்றைய தினம் அந்த பாடல்களை ஒலிப்பதிவு செய்ய முடியாமையினால்,அதே வருடம் தீபாவளி தினத்தன்று அவற்றை ஒலிப்பதிவு செய்திருந்தோம்.. அந்த தீபாவளி நாளும் மறக்க முடியாத தீபாவளியாக அமைந்துவிட்டது.. ஆனால் அந்த ஒலிப்பதிவு என்கையில் இல்லை. அந்த சகோதரிகளும் தொடர்பில் இல்லை. பாடல்கள் மட்டும் மனதில்......

1.அவரவர் வாழ்க்கையில்.... -பாண்டவர் பூமி.
2.ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே.... -ஓட்டோக்ராப்.
3.ஞாபகம் வருதே... -ஓட்டோக்ராப்.
4.இன்னிசை பாடிவரும்... -துள்ளாதமனமும் துள்ளும்.
5.பூவே முதல் பூவே... -காதல் கிறுக்கன்.

No comments: