உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Wednesday, December 30, 2009

விடைகொடுத்து.. வரவேற்கிறோம்.. புத்தாண்டு வாழ்த்துக்கள்...

எனது பதிவுகளால் யார் மனதையும் புண்படுத்தக் கூடாது என்றுதான் நினைத்திருந்தேன். ஆனாலும் எனது இதற்கு முந்தைய "தோல்வியிலிருந்து தப்பிக்கொள்ள புதுவழி சங்க்காவின் சாதுரியம்" என்ற தலைப்பிலமைந்த பதிவானது இலங்கையணி மீது சேறு பூசுவதாக அமைந்துள்ளது என நான் அதிகம் மதிக்கும் எனது ஊடகத் துறையிலும், வலைத் துறையிலும் குருநாதராக இருக்கும் மதிப்புக்குரிய
திரு A . R .V .லோஷன் அவர்கள் தனது கருத்துரையின் ஊடாக சுட்டிக்காட்டியிருந்தார். அந்தப் பதிவின் தலைப்பு இலங்கையணி ரசிகர்களை சீண்டியது என்பது உண்மைதான். எனவே மேற்படி தலைப்புக்காக வருந்துகிறேன். இந்தத் தலைப்பால் அசெளகரியங்களுக்கு உள்ளான இலங்கை அணி ரசிகர்களை மன்னிக்க வேண்டுகிறேன்.. மேலும் இனிவருங் காலங்களில் இவ்வாறான தவறுகள் நிகழாமல் பார்த்துக்கொள்ளுவேனெனவும் தெரிவித்துக்கொள்கிறேன்...

சரி, நிலைமை இவ்வாறு இருக்க ஒரு பிரபல தனியார் தமிழ் வானொலியில் இடம்பெற்ற 2009 ஆம் ஆண்டு பற்றிய கருத்துக் கணிப்பின் உந்துதலால் எனது மனக் கிடைக்கைகளைக் கொட்டி இந்த 2009 ஆம் ஆண்டுக்கு விடைகொடுத்து புதிய 2010 ஆம் ஆண்டை வரேவேற்கும் முகமாக ஒரு அவசரப்பதிவாக இதனைத் தருகின்றேன்.

உண்மையில் ஒவ்வொரு ஆண்டிலும் இன்பங்களும், துன்பங்களும் வரும் என்றாலும் 2009 ஆம் ஆண்டு ஈழத் தமிழர் வாழ்வில் சொல்லணா துயரங்களைத் தந்த ஆண்டு என்றே சொல்ல வேண்டும். இந்த ஆண்டு எனது பார்வையில் மிகவும் மோசமான ஒரு ஆண்டு. கிட்டத் தட்ட 30 ஆண்டுகள் நீரூற்றி வளர்த்த விருட்சத்தை வேரோடு சாய்த்த 2009 ஆம் ஆண்டை நான் வெறுக்கிறேன். எமது உறவுகளின் உயிர்களை வகை தொகையின்றி வாரிக் குடித்த இந்த ஆண்டு ஏன் வந்தது என்று எண்ணத் தோன்றுகிறது. நாம் இந்த ஆண்டில் இழந்தவை ஏராளம் ஆனால் பெற்றவை என்று பார்த்தால் எதுவுமே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இன்று இலங்கையில் உள்ள தமிழர்களை அடிமைகள் என்கின்ற நிலைக்கு கொண்டு வந்த ஆண்டு இது. வெறுமைகளையும், ஏமாற்றங்களையும் ஏராளமாக அள்ளித் தந்த 2009 ஆம் ஆண்டே உனக்கு விடைகொடுக்கின்றோம்.
சரி 2009 ஆம் ஆண்டுக்கு விடைகொடுத்தால் அடுத்து என்ன 2010 ஆம் ஆண்டு வரப்போகின்றது.. வருக!! வருக!! 2010 . நீயாவது நமது வாழ்வில் ஒளியேற்றுவாய் என்கின்ற ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்களுடன் உன்னை வரவேற்கிறோம். வந்து எம் வாழ்வில் வசந்தம் தருவாய் என்று அன்போடு வரவேற்கிறோம். அந்தவகையில் மலரப்போகும் 2010 ஆம் ஆண்டு எமக்கான இனிய எதிர்காலத்தின் புதிய ஆரம்பமாக அமையட்டும்.

என் வலைத் தளத்துக்கு வந்து செல்லும் வாசகர்களுக்கும், கருத்துரைகளால் உற்சாகமூட்டும் அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் இதயங் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். புதிய ஆண்டிலும் எனது பார்வைகளும், பதிவுகளும் உங்கள் அன்புடனும் ஆதரவுடனும் தொடரும்.

No comments: