உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Saturday, December 12, 2009

கவனம் ஒபாமா கறுப்பு முகமூடி அணிந்த ஜோர்ஜ் டபிள்யு புஷ்!!!

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனித் தெலுங்கானா தேசத்தை அமைக்க மத்திய அரசு கொள்கை அளவில் இணக்கப்பாட்டினை வெளியிட்டதன் பின்னர் அங்கு 117 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்திருக்கிறார்கள். அத்துடன் கடலோர ஆந்திர மாநிலம், ராஜலசீமா பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. 1972 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட ஒரு கோரிக்கை ராஷ்டிர சமித்தி தலைவர் சந்திரசேகர ராவின் 11 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைதொடர்ந்து ஒரு கொள்கை அளவிலான உடன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருப்பதன் பின்னணியில்தான் இவையனைத்தும் நிகழ்கின்றன..

இந்த நிலையில் சுதந்திரத்திற்கு பின்னர் ஒடுக்கப்பட்ட ஒரு இனத்திற்காக பல வழிகளிலும் போராடிய இலங்கைச் சிறுபான்மைச் சமூகத்திற்காக குறைந்தபட்சம் ஒரு மாநிலச் சுயாட்சிகூட இதுவரை உறுதிப் படுத்தப்படாத நிலை இலங்ககையின் இனப்பிரச்சினை தொடர்கின்றது.. ஒரு தனித் தெலுங்கானா தேசம் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லப்படுகின்ற இந்தியாவில் அவசியமாகின்ற பொது மனித உரிமை மீறல்கள் இன ஒடுக்கு முறைகள் நிகழும் இலங்கையில் ஏன் ஒரு சுயாட்சி சிறுபான்மைச் சமூகத்திற்கு வழங்கப்படக் கூடாது என்கின்ற ஒரு கேள்வி இயல்பாக எழுவதை தவிர்க்க முடியவில்லை.


சரி இனி விடயத்துக்கு வருவோம் அமெரிக்கா சம்பந்தமாக அண்மைக் காலங்களில் வெளிவரும் செய்திகள் விசித்திரமானவையாகவும், வித்தியாசமானவையாகவும் அமைகின்றன. அந்த வகையில் அண்மையில் சமாதானத்துக்கான நோபல் பரிசை நோர்வேயில் பெற்றுக்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இந்தப் பரிசுக்கு தன்னைவிட பொருத்தமான பலர் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். உண்மையில் சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு பராக் ஒபாமா பொருத்தமற்றவர் என்கின்ற கருத்து பொதுவாகா எல்லோரிடமும் நிலவுகின்றது.



இவ்வாறான ஒரு சூழலில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்க்கப்பட்டிருக்குன்றது. இங்கு அமெரிக்காவைப் பொறுத்த வரையில் அவர் அந்த நாட்டுக்கு ஒரு மாறுதலான ஜனாதிபதி மட்டுமே அன்றி உலக நாடுகள் தொடர்பான அமெரிக்காவின் கொள்கைகளில் அவரால் எந்த மாற்றங்களும் பெரியளவில் கொண்டுவரப்படவில்லை என்று சொல்லப்படுகின்றது. உண்மையில் அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா தெரிவு செய்யப்படும் பட்சத்தில் அது உலக அரங்கில் நிறைய மாறுதல்களைக் கொண்டு வரும் என்றே பலரும் நம்பியிருந்தார்கள். ஏன் தமிழீழ விடுதலைப் புலிகளும் கூட ஒபாமாவின் வருகை போரியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தமிழ்ச் சமூகத்திற்கும், தமக்கும் சாதகமாக அமையும் என்றே கருதியிருந்தார்கள். அத்துடன் அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா தெரிவு செய்யப்பட்டு அவர் மென்போக்கை கடைப்பிடித்தால் அது அமெரிக்காவின் வல்லரசு நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் பரவலான கருத்துக்கள் வெளிவந்திருந்தன.
ஆனால் கருத்துக்கள் அனைத்தையும் பொய்யாக்கியதாக அமெரிக்காவின் நடவடிக்கைகள் பழைய குருடி கதவைத் திறவடி என்பதாகவே அமைந்திருக்கின்றது. அதாவது அமெரிக்கா இஸ்ரேலுக்கு மேலும் முப்பதாயிரம் துருப்புக்களை அனுப்பபோகின்றதாம். அத்துடன் ஈரானின் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் தேவை ஏற்படும் பட்சத்தில் அதன் மீது போர் தொடுக்கப்படும் என்றும் வெள்ளை மாளிகைப் பேச்சாளர் ரொபேர்ட் ஹேர்ட்ஸ் தெரிவித்திருக்கிறார். ஆக மொத்தம் ஒரு பக்கம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிற்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு இன்னுமொரு பக்கம் அமெரிக்காவின் யுத்த மோகங்கள் கலையவில்லை. இந்த நிலையில் ஆசிய நாடான பாகிஸ்தான் மீதும் அமெரிக்காவின் கவனம் திரும்பியிருக்கின்றது. அந்த வகையில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அளிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக உதட்டளவில் மட்டுமே சொல்லிக் கொள்வதாகவும் ஆனால் உண்மையாகச் செயற்படவில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்திருக்கின்றது. இதேவேளை தமது நாடு தொடர்பிலான அணுகு முறையில் அமெரிக்கா மாற்றம் ஒன்றைக் கொண்டுவரவேண்டுமென்று பாகிஸ்தான் ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.
ஏனைய நாடுகள் தொடர்பான அமெரிக்காவின் அணுகுமுறைகள் இவ்வாறு இருக்க இலங்கைக்கும்- அமெரிக்காவுக்கும் இடையில் மீண்டும் சுமுகமான உறவு உருவாகி வருவதாகவும், இலங்கைக்கு வழங்கி வந்த இராணுவ உதவிகளை அமெரிக்க நிறுத்தியதன் பின்னர் இருதரப்பு உறவில் இருந்த விரிசல் நிலை தற்போது நீங்கி வருவதாகவும், அமெரிக்கா நிபந்தனைகளுடன் இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்கும் என்றும், நடை பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்கா யாருக்கும் அதரவு தெரிவிக்காது என்றும் அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான பிரதி ராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட் ஒ பிளேக் தெரிவித்துள்ளார். (ஆமா இனி எதுக்கையா இராணுவ உதவி??? இன்னும் மக்களின் உயிர்களைக் கொல்லவோ???) மேலும் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் அமைதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அங்கு வசிக்கும் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியிருக்கின்றார் (இது வழமையான வலியுறுத்தல்தானுங்கோ)
ஆகமொத்தம் அமெரிக்காவின் நடவடிக்கைகளை பார்க்கின்றபோது அமெரிக்கா உலக நாடுகளிடையே ஒரு ஆரோக்கியமான உறவைப் பேணிக் கொள்ளாமல் , ஒரு வல்லரசாக தனது பலத்தை நீதி, நியாயங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளாமல் சுய லாபங்களுக்காக செயற்படுவதிலையே இன்னமும் முனைப்புக் காட்டிக் கொண்டிருக்கிறது. கவனம் ஒபாமா கறுப்பு முகமூடி அணிந்த ஜோர்ஜ் டபிள்யு புஷ் என்று எச்சரிக்க மட்டுமே எம்மால் முடிகின்றது...

No comments: