உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Sunday, August 23, 2009

இனிதே நிறைவுற்றது இலங்கை வலைப் பதிவாளர் சந்திப்பு...!!!

இன்றைய தினம் ஞாயிற்றுக் கிழைமை திட்டமிடப்பட்டதற்கு அமைவாக இலங்கை வலைப்பதிவாளர் சந்திப்பு காலைப் பொழுதில் ஆரம்பமாகியது. அந்த வகையில் முதலாவதாக வரவேற்புரை இடம் பெற்றது. வரவேற்புரையினை புல்லட் என்று எல்லோராலும் அறியப்பட்ட பவன் நிகழ்த்தினார்.

இந்த இடத்தில் ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டும், அதாவது புல்லட் தனது வலைப்பூவில் பதிந்த வலைப்பதிவாளர் சந்திப்பு நிகழ்வது போன்ற ஒரு கனவுப் பதிவுதான் இந்த ஒன்றுகூடலுக்கு காரணமாக அமைந்திருந்தது. உண்மையில் தனது புனை பெயருக்கு ஏற்ப அவர் ஒரு நகைச்சுவை மன்னனாகவே இருந்தார். அவருடைய வரவேற்புரையில் இதனை காண முடிந்தது.

வரவேற்பைத் தொடர்ந்து வலைப்பதிவும் சட்டமும் என்ற தலைப்பில் சுபானு என்னும் புனைபெயரைக் கொண்ட சயந்தன் சில விளக்கக்ங்களை கொடுத்திருந்தார். இந்த விளக்கத்தில் எமக்கு தெரியாத பல விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. குறிப்பாக ஒரு நிறுவன ரகசியங்களை பதிவேற்றுவது, மற்றவர்களின் பதிவுகளை பிரதி பண்ணி வெளியிடுவது போன்ற செயற்பாடுகளில் சட்டம் எப்படி பாயும் என்பது தொடர்பான விளக்கம் சிறப்பாக இருந்தது.

இவரின் இந்த விளக்கவுரையைத் தொடர்ந்து அதிகமானோர் பயன்படுத்தும் வலைப்பூவான Bloggerஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் பத்து ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு பத்து மெழுகுதிரிகளை ஏற்றி கேக் வெட்டும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த பத்து மெழுகுதிரிகளில் இரண்டாவது மெழுகுதிரியை ஏற்றுவதற்காக வயதாலும், அனுபவங்களாலும் மிகவும் சிறியவனான என்னை அழைத்திருந்தார்கள். மெழுகுதிரி ஏற்றப்பட்டதும் கேக் வெட்டப்பட்டது. கேக்கினை மூத்த ஊடகவியலாளரான திரு எஸ்.எழில்வேந்தன் அவர்கள் உட்பட்ட அறிவியலாளர்கள், எழுத்தாளர்கள் சிலர் வெட்டினார்கள்... ஆதிரை என்ற புனைப்பெயர் கொண்ட ஸ்ரீகரன் Bloggerஇன் பத்தாவது ஆண்டு நிறைவைப்ப்பறிய சில கருத்துக்களை வழங்கினார்.

அடுத்து வலைப் பதிவாளர்களுக்கிடையிலான அறிமுகம் இடம் பெற்றது. இலங்கையின் சகல பாகங்களிலுமிருந்து (யாழ்ப்பாணத்திலிருந்தும்) இந்த நிகழ்வில் வலைப்பதிவாளர்கள், பின்னூட்டமிடுவோர், வலைப்பதிவை ஆரம்பிக்கவுள்ளவர்கள், வாசகர்கள் என கிட்டத்தட்ட எண்பதுக்கும் அதிகமானவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார்கள். உண்மையில் எழுத்துக்களால் மட்டும் அறியப்பட்ட முகம் தெரியாத பலரை சந்திக்கக் கிடைத்தமை மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

வலைப் பதிவாளர்ளுக்கிடையிலான அறிமுகங்களைத் தொடர்ந்து மருதமூரான் என்ற புனைபெயரைக் கொண்ட புருஷோத்தமன் வெளிப்படுத்தல் என்ற தலைப்பில் சில விளக்கங்களைக் கொடுத்திருந்தார். இந்த விளக்கவுரையில் தமிழ்மணம், தமிழிஸ், பூச்சரம் போன்ற திரட்டிகள் தொடர்பாக சொல்லப்பட்டதுடன், இலங்கை வலைப்பதிவாளர்களுக்கென ஆரம்பிக்கப்பட்டுள்ள யாழ்தேவி, மாயாலங்கா திரட்டிகள் பற்றியும் கூறப்பட்டது. இதில் யாழ்தேவி தமிழ்ப் பதிவுகளுக்கான திரட்டி என்பதுடன் மாயாலங்கா சிங்கள, ஆங்கில பதிவுகளுக்கான திரட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த திரட்டிகள் பற்றி பேசும்போது பலரும் தங்கள் சந்தேகங்களையும், கருத்துக்களையும் கூறியிருந்தார்கள். குறிப்பாக பெரும்பாலானவர்கள் யாழ்தேவி என்ற பெயர் பிரதேச குறியீடாக அமைவதுடன் அது அரசியல் ரீதியான ஒரு குழப்பத்திற்கு வழிவகுக்கும் என்று தெரிவித்திருந்தார்கள்.

இவ்வாறு பல கருத்துக்கள், விவாதங்களுடன் இந்த நிகழ்வு நிறைவுபெற அடுத்ததாக சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த மூத்த ஊடகவியலாளரான திரு எஸ்.எழில்வேந்தன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவர் தனது பதிவுலக அனுபவங்கள் சிலவற்றை பகிர்ந்து கொண்டதோடு விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பதிவாளர்களுக்கு சில ஆலோசனைகளை அல்லது அன்பான வேண்டுகைகளை வழங்கியிருந்தார். உண்மையில் பெரிய மனிதர்கள் பெரிய மனிதர்கள்தான். எத்தனை பெரிய மனிதர் திரு எஸ்.எழில்வேந்தன் அவர்கள். ஆனாலும் அந்த கர்வம் கொஞ்சம் கூட இல்லாமல் மிகவும் இயல்பாக பேசினார். இவரிடமிருந்து நம்மைப் போன்றவர்கள் கற்கவேண்டியவை இன்னும் இன்னும் ஏராளம் உள்ளன என்று எனது உள்ளம் சொன்னது.

இந்த சிறப்புரையைத் தொடர்ந்து சேரன் கிரிஷி அவர்கள் சில தொழில்நுட்ப விளக்கங்களை வழங்கினார். உண்மையில் எம்மைப் போன்றவர்களுக்கு அது மிகவும் பிரயோசனமாக இருந்தது. அவரின் தொழில்நுட்ப விளக்கங்களில் வலைப்பூவை பாதுகாப்பது எப்படி என்ற கருத்து மிகவும் முக்கியமானதாக அமைந்தது.

இனி என்ன மீண்டும் புல்லட்.... தனது வலைப்பதிவு அனுபவங்களை சுவாரசியமாக அவருக்கேயுரிய பாணியில் பகிர்ந்துகொண்டார்..

அடுத்து வலைப்பதிவாளரும் இளைய தலைமுறை அறிவிப்பாளர்களின் முதல்வனுமான திரு.லோஷன் அவர்களின் அனுபவப் பகிர்வு இடம்பெற்றது. தலைப்புக்களால் வாசகர்களை கவர்வது தொடர்பாகவும், சீரியஸ் பதிவுகளுக்கு கிடைக்கும் குறைந்த வரவேற்புக்கள் தொடர்பான தனது ஆதங்கத்தையும் அவர் சொல்லியிருந்ததுடன் சில இந்தியத் தமிழை நாங்கள் பயன்படுத்துவது தொடர்பிலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இவரின் இந்த பகிர்வுகளைத் தொடர்ந்து பதிவர்களின் கலந்துரையாடல் இடம் பெற்றது. இந்த கலந்துரையாடலில் அதிகமாக விசைப் பலகைகளின் பாவனை மற்றும் யாழ்தேவி என்ற பெயரில் உள்ள சிக்கல் நிலை தொடர்பாகப் பேசப்பட்டது. மேலும் பலர் தங்கள் பல விதமான கருத்துக்களையும் முன்வைத்திருந்தார்கள்..

இந்த வலைப்பதிவாளர் சந்திப்பின் இறுதி நிகழ்வாக வந்தியத்தேவன் என்ற புனை பெயர் கொண்ட மயூரனின் பின்னூட்டலும் நன்றியுரையும் இடம் பெற்றது. உண்மையில் இங்கு வந்தியத்தேவன் அவர்களைப் பற்றியும் கொஞ்சம் சொல்லலாம். அதாவது நான் இந்த வலைப்பதிவாளர் சந்திப்புக்கு சென்ற போது வாசலில் நின்றவர்கள் வந்தியத்தேவன் அவர்களும் புல்லட் அவர்களும்தான். இதில் வந்தியத்தேவன் அவர்கள் எந்தவித பெருமையும் இல்லாமல் இயல்பாக பேசியமை என்னை மிகவும் கவர்ந்தது. புல்லட் அவர்களும் அப்படித்தான். அவரும் இயல்பாக மிகவும் நகைச்சுவை உணர்வோடு பேசினார்.

இவ்வாறாக அமைந்த இந்த நிகழ்வை ஒழுங்கு செய்தவர்கள் திரு.லோஷன், திரு.வந்தியத்தேவன், திரு.புல்லட், திரு ஆதிரை ஆகிய நான்கு சிங்கங்கள் என்பதுடன் இந்த நிகழ்வை இனிமையாக வெற்றி FM இன் புதிய அறிவிப்பாளரான சதீஷ் தொகுத்து வழங்கினார். மேலும் இந்த நிகழ்வை இணையத்தின் வழியே நேரடியாக ஒளி, ஒலிபரப்பும் ஆர்வத்தை வெளியிட்டு அதனை சிறப்பாக மது அவர்கள் செய்திருந்தார்.. அத்துடன் இந்த நிகழ்வு சிறக்க இன்னும் எத்தனையோ உள்ளங்கள் தங்கள் பங்களிப்பை வழங்கியிருந்தார்கள்..

இப்படியாக இனிதே நிறைவுற்றது இலங்கை வலைப்பதிவாளர் சந்திப்பு.

(((வடை, பற்றீஸ், கேக், கோப்பி எல்லாம் தந்தாங்கப்பா... அதை சொல்லாட்டி பலரும் கோபப்படுவாங்களே. ...)))

3 comments:

SShathiesh-சதீஷ். said...

உங்கள் கருத்துப்பகிர்வு நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள். வோர்ட் வெரிபிகேசனை எடுத்த்டுவிடுங்கள்.கருத்து சொல்ல இலகு

மயில்வாகனம் செந்தூரன். said...

SShathiesh said...
////உங்கள் கருத்துப்பகிர்வு நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.////

வாழ்த்துக்களுக்கு நன்றி சதீஷ்...

////வோர்ட் வெரிபிகேசனை எடுத்த்டுவிடுங்கள்.கருத்து சொல்ல இலகு////

எனக்கு இதைப் பற்றிய விளக்கம் குறைவு... அதனால் உங்களோடு மின்னஞ்சல் வழியே தொடர்புகொள்கிறேன்....

நன்றி...

வந்தியத்தேவன் said...

//இதில் வந்தியத்தேவன் அவர்கள் எந்தவித பெருமையும் இல்லாமல் இயல்பாக பேசியமை என்னை மிகவும் கவர்ந்தது.//

நான் மிகவும் சாதாரணன், என்னை இப்படியெல்லாம் சொல்லி வெட்கப்பட வைத்துவிட்டீர்கள்.

மிகவும் அழகாக எழுதியிருக்கிறீர்கள்.