உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Tuesday, August 4, 2009

வயதுவந்தவர்களுக்கு மட்டும்....!!!!!


அது ஒரு புதன் கிழமை மதியப்பொழுது... அலுவலக வேலையாக சென்று கொண்டிருந்தேன்... வழக்கமாக வீதியால் செல்லும் போது எனது கண்கள் எல்லாவற்றையும் மேய்வதுண்டு... (இது அண்மைக்கால பழக்கம்தான்...) இன்றும் கண்கள் மேய்ந்துகொண்டிருந்தன..
அப்போது அந்த திரையரங்கில் "ஸ்லம்டொக் மில்லியனர்" ,அதுதாங்க நம்ம இசைப்புயல் A.R .ரஹ்மானுக்கு 02ஆஸ்கார் விருதுகளை வாங்கித்தந்த திரைப்படம் காண்பிக்கபடுவதாக சுவர்ப்பத்திரிகை விளம்பரம் செய்யப்பட்டிருந்தது...
இதில் என்ன ஆச்சரியம் திரையரங்கென்றால் திரைப்படம் காண்பிக்கத்தானே செய்வாங்க, என்று நீங்க நினைக்கிறது புரியுது.. அதில்ல முக்கியமான விடயம்...
அதாவது அந்த திரைப்படம் காண்பிக்கப்படுவதாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்த திரையரங்கு வழ்க்கமாக வயது வந்தவர்களுக்கு மட்டும் திரைப்படம் காட்சிப்படுத்தும் திரையரங்கு. இதுதான் என்னை குழப்பத்தில் ஆழ்த்தியது...
இந்த குழப்பத்தோடு அலுவலகம் சென்று, அங்கிருந்த சகாக்களுடன் பேசியபோது ஒருவர் சொன்னார், வயதுவந்தவர்களுக்கு மட்டும் காண்பிக்கும் திரைப்படங்களுக்கு அரசு தடை விதித்துள்ளதாம் என்று... அப்போதுதான் எனக்கு குழ்ப்பம் தெளிந்தது...(காலையிலையே இந்த விடயம் தெரிந்திருந்த போதிலும் அந்த இடத்தில் உடனடியாக ஞாபகம் வரவில்லை.)
உண்மையில் அரசின் இந்த தடை உத்தரவு செய்தியை கேட்டவுடன் நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.. ஆனாலும் ஒரு ஊடகவியலாளனாய் இதனை கொஞ்சம் ஆராய்ந்து பார்க்கவேண்டிய அவசியம் உள்ளது. இந்த அவசரப்பதிவின் மூலம் அதனை முழுமையாக செய்யாவிட்டாலும் ஓரளவுக்கு செய்ய முனைகிறேன்....
எனக்கு கொழும்பும், அதன் கலாசாரமும், நடைமுறைகளும் மிகவும் புதியவை. நான் வளர்ந்த சூழல் கொழும்பை விட அபிவிருத்தியில் பின்தங்கிய ஒன்று என்றாலும் அது கலாசாரத்திலும் கட்டுக்கோப்பிலும் சிறந்த சூழல்...
அதனால் அங்கு ஆபாசப்படங்கள் பார்க்கவும் முடியாது.. ஏன் நமது தமிழ் சினிமாவையே இன்னுமொரு காட்சித்தணிககைக்கு உட்படுத்திய பின்னரே பார்க்க முடியும்... அவ்வளவுக்கு அங்கு ஒரு ஒழுங்கு முறை இருந்தது...
இதனாலோ என்னவோ வயது வந்தவர்களுக்கான சினிமாவை இலங்கையில் தடை செய்தமை உடனடியாக எனது பார்வையில் ஒரு ஆரோக்கியமான, சிறந்த இளைய சமுதாயத்தைச் உருவாக்கும் என்ற வகையில் அமைந்தது...
ஆனாலும் அதற்கும் அப்பால் இந்த விடயத்தில் பல சிக்கல்கள் உள்ளன.
அதாவது அரசாங்கத்தின் இந்த உடனடி தடையால் திரைப்படங்களை இறக்குமதி செய்தவர்கள் நஷ்டம் அடைவதுடன், அந்த இடத்தை நிரப்ப கையிருப்பில் வேறு திரைப்படங்கள் இல்லை என்கின்ற நிலையும் உள்ளது... எனவே இதனை உடனடியாக நடைமுறைப்படுத்துவதால் இறக்குமதியாளர்கள் பாதிப்படைவார்கள் என்பதுடன் எதிர்காலத்தில் அவர்கள் வேறு நல்ல திரைப் படங்களை இறக்குமதி செய்வதற்கும் பின் நிற்க வாய்ப்புள்ளது...
இங்கே இந்த விடயம் ஒரு புறம் இருக்க இன்னுமொரு விடயத்தையும் தெளிவாகச் சொல்ல வேண்டியுள்ளது...
அதாவது இலங்கையை பொறுத்தவரை இங்கு முறையான பாலியல் கல்வி பாடத்திட்டத்தில் இருந்தாலும் அதனை மாணவர்களுக்கு போதிப்பதில் ஆசிரியர்கள் பின் நிற்கிறார்கள்... (இது எனது சொந்த அனுபவமோ என்று எண்ணாதீர்கள் பொதுவான விடயம்.) இதுவும் மாணவர் சமுதாயம் அல்லது இளைஞர் சமுதாயம் ஆபாசப்படங்களின் மீது மோகம் செலுத்த காரணமாக அமைகின்றது என்பதையும் மறுத்துவிட முடியாது...
இவ்வாறன ஒரு சூழ்நிலையில் இலங்கையைப் பொறுத்தவரை இந்த பாலியல் கற்கை நெறிகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவது அவசியமான ஒன்று. மேலும் அவ்வாறு இல்லாத ஒரு சந்தர்ப்பத்தில் திரையரங்குகளை தடைசெய்தாலும் இறுவெட்டுக்களின் பாவனையை கட்டுப்படுத்துவதில் பாரிய சிக்கல்களை தோற்றுவிக்கும்.
அத்துடன் இதற்காக வழங்கப்படும் தண்டனைகள் மாணவர் சமுதாயத்தின் அல்லது இளைஞர் சமுதாயத்தின் எதிர்காலங்களையும் கேள்விக்குறியாக்கும்... எனவே எல்லா விடயங்களையும் தொகுத்து நோக்கும்போது கல்வி திட்டங்களின் ஊடாக மாணவர்களுக்கு முறையான பாலியல் கல்வியை வழங்குவது திரைப்படங்களை தடை செய்வதற்கான ஆரம்பமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை...
பி.கு.-தலைப்பைப்பார்த்து ஏமார்ந்த நண்பர்கள் மன்னிக்கவும். இது ஒரு அவசரப்பதிவு என்பதால் அதிகம் பேச முடியவில்லை, அதற்கும் மன்னிக்கவும்.

No comments: