உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Friday, August 21, 2009

புகையிரத பயணத்தில் உதித்த சின்ன சின்ன கற்பனைகள்..

எழில் கொஞ்சும் குளு குளு மலையகப் பயணத்தின்போது உதித்த சின்ன சின்ன கற்பனைகளை இந்தப் பதிவு சுமந்து வருகிறது....

நீ பார்த்த பார்வை...

முழு முகச் சவரம் செய்துவிட்டு

வகுப்பறைக்குள் நான் வந்த போது

ஓரக் கண்ணால் ஒழிந்தொழிந்து நீ பார்த்த பார்வை

இன்னும் என் உள்ளத்தில் உள்ளதடி..

கண்ணீர்!!!!....

இளவரசனின் மரணத்துயரால்

இளவரசி சிந்திய கண்ணீர்

அங்கே அருவியாய் கொட்டுதாம்..

அப்போ

உலகில் உள்ள மொத்தக் கடலும்

உன்னை பிரிந்திருந்த நாட்களில்

நான் பொழிந்த கண்ணீரா???

கடந்து செல்கின்றாய்....

மிதி பலகையில் பயணித்த போது

தென்றல் வருடிய ஒவ்வொரு கணமும்

நீ என்னை கடந்து சென்ற ஞாபகங்கள்....

மறக்காது....

கணப்பொழுதில்

கன்னத்தில் நீ தந்த காந்த முத்தம்

மரணத்தின் கடைசி மணித்துளிவரை

மறக்காது பெண்ணே.......

கெளரவம்..

மெல்லினிய உன் சொல்லொலி

காற்றலையில் கலக்கையில்

காற்றலையும்

கெளரவம் பெறுகுதடி பெண்ணே..

இங்கொரு இதயம்...

ஓங்கி வளர்ந்த ஆலமரம்

அதில் ஓய்யாரமாய்

பல பச்சைக்கிளிகள்...

வாழ்ந்த காலத்தை மறக்கமுடியுமா??

கடந்துபோன

கல்லூரிக்காலம் இனி வராதா?? என்ற ஏக்கத்துடன்

இங்கொரு இதயம்...

பிரிவு...

அந்தப் புகை வண்டிப் பயணத்தில்

ஒவ்வொரு மலைக் குடைவுகளை கடந்தபோதும்

உன்னைப் பிரிந்திருந்த இருண்ட நாட்கள்

நிழலாடின நெஞ்சில்....

மெளனம்...

நீண்ட உன் மெளனம்

எனக்குள் நிறைந்த சலனம்...

அது மரண வேதனையிலும் கொடியது....

மங்கையே!

இன்றே உன் மெளனம் கலைத்து

என் சலனம் களைந்துவிடு....

இல்லையேல்

இந்த இதயம் இனியும் தாங்காது....

பார்வை...

உயர்ந்த மலையின்

உச்சியிலே நின்றபோது

பனித்துளிகள் மேனி தடவிய

மணித்துளிகள் ஒவ்வொன்றும்

உன் பார்வை

என்மேல் பட்ட நாட்களை மீட்டிச் சென்றன...

மாற்றுவோம்....

காலங்கள் மாறும் என்றிருக்காமல்,

காலத்தை நாம் மாற்றுவோம்...

பொறாமை..

தங்கு தடையின்றி

தண்டவாளத்தில் பயணிக்கும்

புகையிரதத்தை பார்க்க

பொறாமையாய் உள்ளதடி....

இந்த புகையிரதம்போல்

எங்கள் காதல் இல்லையே!!!!

நீயே வருகிறாய்...

நீண்ட நினைவேடுகளின்

பசுமையான பக்கங்களில் எல்லாம்

அழியாத அழகிய குறிப்புக்களாய்

நீயே வருகிறாய்....

ஏக்கம்!!!!

அந்த புகையிரத ஊழியர்

பச்சைக் கொடி அசைக்கும்போதெல்லாம்

நீ என் காதலுக்கு

பச்சைக்கொடி காட்டாயோ

என்ற ஏக்கம் எனக்குள்ளே!!!!

செல்லாக் காசு....

பசிக்குது தர்மம் பண்ணுங்க...

வயசான முதியவர்...

ஒரு கையில் பொல்லு மறு கையில் தட்டு....

கந்தல் ஆடை...

முகச்சவரம் செய்து பல நாட்கள் இருக்கும்....

மனம் இரங்கியது...

பக்கத்துக் கடையில் பாண் வாங்கிக்கொடுக்க எண்ணி

கடைக்காரனிடம் பணத்தை நீட்டினேன்....

கரையில் சின்ன கிழிசலால்

அது செல்லாக்காசு என்றான் கடைக்காரன்....

சின்ன மெளனம்...

இன்னுமொரு காசை நீட்டினேன்...

கம கம பாணை கையில் தந்தான்...

இப்போ அந்தப் பாண்

முதியவரின் கைக்கு மாறியது...

பசியின் கொடுமை

அவர் அதை சாப்பிட்ட அழகில் தெரிந்தது...

முதியவரின் முகம்

மெல்ல மெல்ல மலர்ந்தது....

விடைபெற்றேன்...

இப்போ,

அந்த செல்லா காசின் ஞாபகம்...

எடுத்துப் பார்த்தேன்...

கொஞ்சம் சிந்தித்தேன்....

செல்லாக் காசு...

இது செல்லாக் காசு...

கரை கொஞ்சம் கிழிந்ததனால் அல்ல!

ஏழையின் பசியை போக்காததால்...

செல்லாக் காசு...

இது ஒரு செல்லாக் காசு.....

No comments: