உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Sunday, August 16, 2009

முகாம்களை நோக்கி...... பகுதி-01

வவுனியா முகாம்களில் உள்ள எனது நண்பர்களையும், உறவினர்களையும் பார்வையிடுவதற்காக செல்லவுள்ளேன் என்று கூறியபோது, நண்பர்கள் சிலர் அங்குள்ள உண்மை நிலைமைகளை எடுத்து வருமாறு கூறியிருந்தார்கள்..

நண்பர்களின் இந்த வேண்டுகோளே இந்தத் தொடருக்கு என்னை அழைத்திருக்கிறது. அதாவது நண்பர்கள் அவாறு சொன்னபோதே வவுனியா முகாம்களை நோக்கிய பயணத்தை பயண அனுபவமாகவும், இன்னோரன்ன விடயங்களை வெளிப்படுத்துவதற்காகவும் வலைப்பூவின் வழியே பகிர்ந்துகொள்ள எண்ணினேன்.

இதன்படி எனது பயணத்தையும், அங்கு நடந்த விடயங்களையும் இந்த பதிவுத்தொடரின் மூலம் பகிர்ந்துகொள்கிறேன்..

நான் கடந்த சித்திரை வருடப்பிறப்பிற்கு வவுனியா சென்று வந்ததன் பின்னர் பல முறை அங்கு சென்றுவர வேண்டிய தேவை இருந்தபோதிலும் நேரச்சிக்கல் காரணமாக அது சாத்தியமாகவில்லை. அதாவது கடந்த மே மாதத்தில்தான் வவுனியாவை நோக்கி முல்லைத்தீவு மாவட்டத்தில் வசித்த எனது உறவினர்களும், நண்பர்களும் இடம்பெயர்ந்து வந்திருந்தார்கள். எனவே நீண்டகாலமாக சந்திக்க முடியாமல் அந்த இரத்தபூமியில் இருந்து வந்த அவர்கள் எல்லோரையும் சென்று பார்க்க வேண்டிய தேவை இருந்தது.

இப்படியாக அங்கு சென்றுவர வேண்டிய அவசியம் இருந்த போதிலும் அது சாத்தியமாகவில்லை. அதனால் கவலை தோய்ந்து இந்த இயந்திர வாழ்வுக்குள் இயங்க்கிக்கொண்டிருந்தபோதுதான் இந்தப் பயணம் சாத்தியமானது.

ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி அங்கு செல்ல முடியும். இது எனக்கு மிகுந்த சந்தோசம். அன்றைய தினம் இரவு தபால் புகையிரதத்தில் வவுனியா நோக்கி பயணிக்க தீர்மானித்து, முதல் நாள் வெள்ளிக்கிழைமை ஆசன முற்பதிவுக்க்காக கோட்டை புகையிரத நிலையத்திற்கு சென்றிருந்தேன். (முற்பதிவு சாத்தியமாகுமா என மனதில் கொஞ்ச பயமிருந்தது.)

ஆசன முற்பதிவுச் சிட்டையை பெற்றுக்கொண்டு அன்றைய வழக்கப்படி அலுவலகம்... அங்கிருந்து வீடு செல்ல நேரம் இரவுப்பொழுது........ அதனால் நண்பர்களுக்கும், உறவினர்களுக்குமான பொருட்கொள்வனவை அடுத்த நாளைக்கு (சனிக்கிழமை) ஒத்திவைத்துவிட்டு சில வேலைகள்........

இது நான் வவுனியா பயணிக்கவுள்ள சனிக்கிழமை காலைப்பொழுது.. வழக்கமான கற்கைநெறி வகுப்பு.. அது முடிய மதியமாகிவிட்டது.. இப்போது அந்த பொருட்கொள்வனவு.. முடிய கிடைத்த குறுகிய நேரத்துக்குள் முகப்புத்தகத்துடன்... பின்னர் கொழும்பில் நான் தங்கியுள்ள வீட்டை நோக்கி... அங்கு செல்லும்போது இரவு ஏழு மணி கடந்திருந்தது. பயணப்பையை தயார் செய்தேன்... (இதுதான் நம்ம வழக்கம்..) உணவு.... அதன் பின் பேரூந்து தரிப்பிடம் நோக்கி நகர்வு.. நேரம் இரவு எட்டு மணி முப்பது நிமிடத்தை அண்மித்துக்கொண்டிருந்தது. பேரூந்து தரிப்பிடத்திலிருந்து கோட்டை புகையிரத நிலையம் நோக்கி பேரூந்தில் ஒரு பயணம்.. நேரம் ஒன்பது மணியைத் தொடுவதற்கு இன்னும் சில மணித்துளிகள் மட்டுமே இருந்தன...

புகையிரத நிலைய நுழைவாயிலில் வழமையான சோதனை.. எனது பயணப்பை மிகவும் சிறியது என்றாலும் எனக்கு முன்னால் நின்றவர் ஏராளமான மிகவும் பெரிய பைகளை வைத்திருந்தமையால் அதில் ஒரு தாமதம்.. எல்லாம் முடிந்து உள்ளே போனால் அங்கு என்றுமில்லாத அளவுக்கு மூன்றாம் மேடையில் (இதுதான் வவுனியா புகையிரதம் வரும் மேடை) நிறைந்த மக்கள் கூட்டம். அப்போது பக்கத்தில் நின்ற ஒருவர் "இன்று என்றுமில்லாத அளவுக்கு கூட்டமாக உள்ளதே! எப்படி இதுக்குள்ள சீட் கிடைக்கப்போகுது" என்று சலித்துக்கொண்டார். "நல்ல வேளை ஏற்கனவே முற்பதிவு செய்துகொண்டேன்" என்று எனது உள்மனம் சொன்னது.(சுயநலம்)

நேரம் ஒன்பது மணி முப்பது நிமிடத்தை அண்மிக்கும்போது அந்த புகையிரதம் வந்தது.. உண்மையில் அது வழக்கமாக முதலாம் மேடையில் வரவேண்டிய புகையிரதம். அதாவது பதுளை நோக்கி செல்லும் புகையிரதம். அப்போதுதான் என்றுமில்லா கூட்டம் அன்று நின்றமை ஏன் என்று புரிந்தது. அந்தபுகையிரதம் புறப்பட்டது... இனி நமக்கான புகையிரதம்..... ம்ம்... அதுவும் வந்தது....

வவுனியா நோக்கி செல்லும் தபால் புகையிரதம் வந்தது... நேரம் ஒன்பது மணி நாற்பத்தைந்து நிமிடமாகிக்கொண்டிருந்தது... பயணிகள் எல்லோரும் முண்டியடித்துக்கொண்டு ஏறினார்கள்... நானும் என் பங்கிற்கு ஏறினேன்... சிறிது நேரத்தில் புகையிரதம் புறப்பட்டது.....

தனியாக இருந்து இந்த இயந்திரமயமாக்கப்பட்ட நகரத்திற்குள் வாழ்க்கையை நகர்த்தும் எனக்கு எனது சொந்த இடத்திற்கு ஓரளவு அண்மையில் இருக்கக்கூடிய வவுனியா நோக்கிய பயணமும், அங்குள்ள என் உறவுகள், நண்பர்களை பார்க்கும் ஆர்வமும் மனதுக்கு இனிமையாகவும், சந்தோசமாகவும் இருந்தது. வழக்கமாக இரவு புகையிரதங்களில் பயணிக்கும்போது உறக்கம் வருவது குறைவு. ஆனால் அன்று வழமைக்கு மாறாக கொஞ்சம் தூக்கம்...

நான் எனக்கு ஆறு வயது இருக்கும்போது புகையிரதத்தில் முதன்முதலாக பயணித்திருக்கின்றேன்.. அதற்கு பின்னர் அங்கும், இங்குமென பலமுறை பயணித்தாலும் இம்முறை பயணம் ஒரு உற்சாக உணர்வைகொடுத்தது..

ஆகஸ்ட் மாதம் இரண்டாம் திகதி ஞாயிற்றுக்கிழமை நேரம் அதிகாலை ஐந்துமணி பதினைந்து நிமிடத்தை கடந்திருந்தது... புகையிரதம் வவுனியா புகையிரத நிலையத்தை அடைய பயணிகளோடு பயணிகளாக கால்பதித்தேன்... அப்போது வவுனியா நிலையத்தில் கடுகதி புகையிரதத்தில் கொழும்பு நோக்கி வருவதற்கான பயணிகள் வரிசையில் காத்திருந்தார்கள்.. ((ம்ம்ம்... எங்கு போனாலும் வரிசைதான்.))எம்மை இறக்கிவிட்டு நாம் வந்த அந்த புகையிரதம் தாண்டிக்குளம் நோக்கி புறப்பட்டது. உள்ளே புகையிரத ஊழியர்களை மட்டுமே காணக்கிடைத்தது.(இதனால் அரசாங்கத்துக்கு எவ்வளவு நஷ்டமாகியிருக்கும்? என்று நீங்கள் சிந்திப்பது புரிகிறது.)

இப்போது புகையிரத நிலையத்திலிருந்து முச்சக்கர வண்டியில் வீடு நோக்கி ஒரு பயணம்.. அப்போது வவுனியாவில் தேர்தல் காற்று பலமாக அடித்துக்கொண்டிருந்தது.. சுவரொட்டிகளால் சுவர்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன... வீட்டை அடைந்தபோது நிலம் கொஞ்சம் தெளிந்து பொழுது புலர்ந்துகொண்டிருந்தது..

உண்மையில் அன்றைய தினமே அதாவது ஆகஸ்ட் இரண்டாம் திகதி ஞாயிற்றுக் கிழைமை அன்றே முகாம்களுக்கு செல்வதற்கு திட்டமிட்டிருந்தபோதிலும், எனது நண்பன் ஒருவன் வவுனியாவில் வீத்திச்சோதனையில் அடையாள அட்டை இல்லாமல் வந்து சிக்கிக்கொண்டமையால் (அவன் அடையாள அட்டையை தொலைத்திருந்தான்) அது சாத்தியமாகவில்லை.. எனவே அன்றைய பொழுது வீட்டிலையே கழிய அடுத்தநாள் திங்கட்கிழமையை முகாம்களுக்கான முதலாவது பயண நாளாக தீர்மானித்தேன்....

(((((இது ஆரம்பம் இனித்தான் அத்தியாயம்... முகாம்களை நோக்கி....... இன்னும் வரும்........)))))

2 comments:

சப்ராஸ் அபூ பக்கர் said...

உங்கள் பயண அனுபவமும், சொல்லாமல் சொல்லப் பட்ட சில விடயங்களும் அருமையாக இருந்தது செந்தூ....

வாழ்த்துக்கள்... தொடருங்கள் உங்கள் பயணத்தை......

மயில்வாகனம் செந்தூரன். said...

////சொல்லாமல் சொல்லப் பட்ட சில விடயங்களும்/////
என்ன செய்ய அபூ....???

//////வாழ்த்துக்கள்... தொடருங்கள் உங்கள் பயணத்தை......//////
நண்பா உங்கள் வாழ்த்துக்கள் உற்சாகம் தருகிறது...
நன்றி அபூ.......