இலங்கையில் நடைபெற்று வரும் இருபதுக்கு இருபது உலகக் கிண்ண போட்டியின் ஒன்பதாவது போட்டி பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையில் கண்டி பல்லேகல்ல விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற முஹமட் ஹபீஸ் தலைமையிலான பாகிஸ்தான் அணியினர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் புகுந்து நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்கள் நிறைவில் ஆறு இலக்குகளை இழந்து 177 ஓட்டங்களை பெற்றனர்.
இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற முஹமட் ஹபீஸ் தலைமையிலான பாகிஸ்தான் அணியினர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் புகுந்து நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்கள் நிறைவில் ஆறு இலக்குகளை இழந்து 177 ஓட்டங்களை பெற்றனர்.
அணி சார்பில் ஜம்சேத் 35 பந்து வீச்சுக்களை எதிர் கொண்டு இரண்டு நான்கு ஓட்ட பெறுதிகள் நான்கு ஆறு ஓட்ட பெறுதிகள் அடங்கலாக 56 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஹபீஸ் 38 பந்து வேச்சுக்களை எதிர் கொண்டு தலா இரண்டு நான்கு மற்றும் ஆறு ஓட்ட பெறுதிகள் அடங்கலாக 43 ஓட்டங்களையும் சேர்த்தனர்.
பந்து வீச்சில் நியுசிலாந்து அணி சார்பில் சௌத்தி, ஓரம் ஆகியோர் தலா இரண்டு இலக்குகளை வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து இருபது ஓவர்களில் 178 ஓட்டங்கள் என்னும் வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாட களம் புகுந்த நியுசிலாந்து அணியினர் 9 இலக்குகளை இழந்து 164 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர்.
அணி சார்பில் நிக்கோல் 33 ஓட்டங்களையும், மக்கலம் 32 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பாகிஸ்தான் அணி சார்பில் சஜிட் அஜ்மல் நான்கு இலக்குகளை பதம்பார்த்தார்.
அந்த வகையில் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியானது 13 ஓடங்களினால் வெற்றியீட்டியுள்ளது.
இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில் பிரகாசித்த நசிர் ஜம்சேத் தெரிவு செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment