உலகெங்கும் தமிழிசை தமிழருவி வானொலி.

முதன் முதலாக இலங்கையின் வடக்கே முல்லைத்தீவிலிருந்து முழு உலகெங்கும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழருவி வானொலியின் நேரடி நிகழ்ச்ச்சிகளை தினமும் www.tamilaruviradio.com என்னும் இணையம் வழியே இலங்கை, இந்திய நேரப்படி காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கேட்டு மகிழுங்கள். நேரடி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio

Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662 இணைய வசதியுள்ள எந்தவொரு கையடக்க தொலைபேசியிலும் தமிழருவி வானொலியை செவிமடுக்க
www.tamilaruviradio.comஎன்னும் இணைய முகவரியை பயன்படுத்துங்கள்.. நன்றி.

Tuesday, May 19, 2009

இப்போதுள்ள குழப்பம்.

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கொல்லப்பட்டதான தகவல் உண்மையா பொய்யா என்பதே இப்பொழுது அனைவர் மனதிலும் உள்ள கேள்வி. இந்த கேள்விக்கான பதிலை தேடுவதிலையே அனைத்து தமிழ் மற்றும் சர்வதேச நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன. அரச சார்பு இணையங்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள் என்று பலவற்றால் இது தொடர்பான தகவல்கள் பரப்பபட்டு வருகின்ற போதிலும், இன்று பாராளு மன்றில் உரையாற்றிய ஜனாதிபதி புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்த தவறிவிட்டார். அதாவது பல விடயங்கள் பற்றி பேசிய அவரால் புலிகளின் தலைவர் தொடர்பாக ஒரு விடையம்தானும் சொல்ல முடியாத அளவிற்கு குழப்பம் நிறைந்த ஒன்றாகவே இந்த தகவல் உள்ளது. ஒரு நாட்டின் ஜனாதிபதியால் உறுதியாக சொல்ல முடியாத ஒன்றை இன்று தென்னிலங்கை சிங்கள சமூகம் ஒரு பெரும் வெற்றியாக கொண்டாடுகின்றது. ஆழமாக சிந்தித்து பார்த்தால் இதன் உள்ளார்ந்த நோக்கம் தெரிய வரும் அதாவது, திட்டமிடப்பட்ட ஒரு பொய் பரப்புரையை நம்பி சிங்கள இனவாதிகள் (இப்போது அவர்கள்தான் அதிகம் சிங்கள மக்கள் குறைவு.) தங்கள் அற்ப கொண்டாட்டங்களை அரங்க்கேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் வன்னியில் நடந்தது என்ன? அல்லது நடப்பது என்ன? சரியாக எதனையும் சுயாதீன முறையில் உறுதிப்படுத்த முடியாமல் உள்ளது. எனினும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் இன்னும் உயிருடன் உள்ளார் என்பது இதுவரையிலான ஆய்வுகள் கருத்துக்களின் பிரகாரம் உண்மையாக உள்ளது. ஆனால் இன்றைய சிங்கள மற்றும் ஒரு சில தமிழ் பத்திரிகைகளை பார்த்த எவனும் நிச்சயம் குழப்பம் அடைந்திருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் முன்பெல்லாம் புலிகளின் தலைவர் தொடர்பாக செய்திகள் வந்தாலும் முன்பக்கத்தில் தலைப்பு செய்தியாக இடம் பிடிப்பதில்லை. ஆனால் இன்று நிலைமை அவ்வாறு இல்லாமல் புகைப்படம் அடங்கலாக வந்த செய்திகள் கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும் இவை அனைத்தும் அரசால் சொல்லப்பட்ட செய்திகள். ஆதாரம் இல்லாத விடயங்கள் பல அதில் அடங்குகின்றன. எனவே ஆதாரம் அற்ற அந்த விடயங்களை கண்டு அதிர்ச்சியோ ஆழ்ந்த கவலையோ அடைய தேவையில்லை.

ஆனால் இங்கு பரிதாபமான ஒரு விடயம் என்னவெனில் அரசின் பொய் தகவலை இலங்கையில் உள்ள தனியார் தமிழ் வானொலி, தொலைக்காட்சிகள் மக்கள் மத்தியில் பரப்பியமைதான். ஒரு வானொலி நண்பர் சொன்னார் நேற்று மாலை அவரின் நிகழ்ச்சிக்கு நேயர்கள் பாடல் கேட்க இணைந்து கொண்டது மிக மிக குறைவு என்று. இதன் மூலம் அரசாங்கத்தின் பரப்புரை இலங்கை தமிழ் உள்ளங்களை எவ்வளவு தூரம் சென்றடைந்துள்ளது என்பதை அறிய முடிகின்றது. அது மட்டுமன்றி மறுதலையாக பார்த்தால் மக்கள் பிரபாகரனை எவ்வளவுக்கு ஏற்று கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறதல்லவா? ஆக மொத்தம் வன்னியில் ஏற்பட்ட மக்கள் இழப்பை மூடிமறைக்க கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு பொய் பரப்புரையில் அரசு வெற்றி கண்டதே தவிர, தமிழ் மக்களின் மனங்களை வெல்லவோ அல்லது புலித் தலைமையை அழிக்கவோ முடியவில்லை என்பதே உண்மையாகும்.

No comments: