திரு A . R .V .லோஷன் அவர்கள் தனது கருத்துரையின் ஊடாக சுட்டிக்காட்டியிருந்தார். அந்தப் பதிவின் தலைப்பு இலங்கையணி ரசிகர்களை சீண்டியது என்பது உண்மைதான். எனவே மேற்படி தலைப்புக்காக வருந்துகிறேன். இந்தத் தலைப்பால் அசெளகரியங்களுக்கு உள்ளான இலங்கை அணி ரசிகர்களை மன்னிக்க வேண்டுகிறேன்.. மேலும் இனிவருங் காலங்களில் இவ்வாறான தவறுகள் நிகழாமல் பார்த்துக்கொள்ளுவேனெனவும் தெரிவித்துக்கொள்கிறேன்...
சரி, நிலைமை இவ்வாறு இருக்க ஒரு பிரபல தனியார் தமிழ் வானொலியில் இடம்பெற்ற 2009 ஆம் ஆண்டு பற்றிய கருத்துக் கணிப்பின் உந்துதலால் எனது மனக் கிடைக்கைகளைக் கொட்டி இந்த 2009 ஆம் ஆண்டுக்கு விடைகொடுத்து புதிய 2010 ஆம் ஆண்டை வரேவேற்கும் முகமாக ஒரு அவசரப்பதிவாக இதனைத் தருகின்றேன்.

உண்மையில் ஒவ்வொரு ஆண்டிலும் இன்பங்களும், துன்பங்களும் வரும் என்றாலும் 2009 ஆம் ஆண்டு ஈழத் தமிழர் வாழ்வில் சொல்லணா துயரங்களைத் தந்த ஆண்டு என்றே சொல்ல வேண்டும். இந்த ஆண்டு எனது பார்வையில் மிகவும் மோசமான ஒரு ஆண்டு. கிட்டத் தட்ட 30 ஆண்டுகள் நீரூற்றி வளர்த்த விருட்சத்தை வேரோடு சாய்த்த 2009 ஆம் ஆண்டை நான் வெறுக்கிறேன். எமது உறவுகளின் உயிர்களை வகை தொகையின்றி வாரிக் குடித்த இந்த ஆண்டு ஏன் வந்தது என்று எண்ணத் தோன்றுகிறது. நாம் இந்த ஆண்டில் இழந்தவை ஏராளம் ஆனால் பெற்றவை என்று பார்த்தால் எதுவுமே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
இன்று இலங்கையில் உள்ள தமிழர்களை அடிமைகள் என்கின்ற நிலைக்கு கொண்டு வந்த ஆண்டு இது. வெறுமைகளையும், ஏமாற்றங்களையும் ஏராளமாக அள்ளித் தந்த 2009 ஆம் ஆண்டே உனக்கு விடைகொடுக்கின்றோம்.

சரி 2009 ஆம் ஆண்டுக்கு விடைகொடுத்தால் அடுத்து என்ன 2010 ஆம் ஆண்டு வரப்போகின்றது.. வருக!! வருக!! 2010 . நீயாவது நமது வாழ்வில் ஒளியேற்றுவாய் என்கின்ற ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்களுடன் உன்னை வரவேற்கிறோம். வந்து எம் வாழ்வில் வசந்தம் தருவாய் என்று அன்போடு வரவேற்கிறோம். அந்தவகையில் மலரப்போகும் 2010 ஆம் ஆண்டு எமக்கான இனிய எதிர்காலத்தின் புதிய ஆரம்பமாக அமையட்டும்.
என் வலைத் தளத்துக்கு வந்து செல்லும் வாசகர்களுக்கும், கருத்துரைகளால் உற்சாகமூட்டும் அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் இதயங் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். புதிய ஆண்டிலும் எனது பார்வைகளும், பதிவுகளும் உங்கள் அன்புடனும் ஆதரவுடனும் தொடரும்.
இவ்வாறாக எமது வகுப்பில் கள்ளப்பாட்டு (கல்விப்பாடு) கிராமத்திலிருந்து இரண்டு நண்பர்கள் நாங்கள் சாதாரண தரம் படிக்கும்போதே எமது வகுப்பில் வந்து இணைத்திருந்தார்கள். பின்னர் உயர்தரத்திலும் அவர்கள் எமது பிரிவிலையே (உயிரியல் பிரிவு) தொடர்ந்தார்கள். அவர்கள் இருவரும் கல்வியில் மிகுந்த ஆர்வமுடையவர்கள் என்பதுடன் இருவருமே கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்கள். (இங்கு அவர்கள் கிறிஸ்தவ சமயத்தவர்கள் என்று குறிப்பிடுவதால் மத ரீதியான வேற்றுமை காட்டுவதாக அர்த்தம் கொள்ளவேண்டாம்.) எனவே 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி கிறிஸ்மஸ் பண்டிகைக்காக எங்களை அழைத்திருந்தார்கள்.
பொழுது இருண்டது அன்றைய நாளில் நண்பனைக் காணவில்லை என்ற ஏக்கத்துடன் வீட்டுக்கு சென்றேன். அடுத்த நாள் காலையில் நண்பனின் அப்பாவிடம் சென்றபோது அவர் எங்கே மகன் என்று கேட்டார்?? எனக்கோ என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒருவாறு சுதாகரித்துக் கொண்டு ஒருவர் சொன்ன குறிப்பினடிப்படையில் அவன் உங்களைத் தேடி ஒட்டுசுட்டான் சென்றுவிட்டான் என்று சொன்னேன். ஒட்டுசுட்டான் என்பது முள்ளியவளையிளிருந்து 16 கிலோமீற்றருக்கு அப்பால் அமைந்துள்ளது. உடனே நண்பனின் அப்பா அங்கே போய் அவனைக் கூட்டிவர முடியுமா?? என்று கேட்க போகிறோம் என்று சொல்லிவிட்டு நானும் இன்னுமொரு அண்ணாவும் உந்துருளியில் ஒட்டுசுட்டான் நோக்கி புறப்பட்டோம். ஒட்டுசுட்டானுக்கு செல்லும் பாதை (மாங்குளம்-முல்லைத்தீவு வீதியின் ஒரு பகுதி) குன்றும் குழியும் நிறைந்த செப்பனிடப்படாத பாதையாக இருந்தது. அதனால் நாங்கள் ஒட்டுசுட்டானை அண்மித்தபோது எமது உந்துருளி பஞ்ச்சராகிவிட்டது. ஒருவாறு உந்துருளியைத் தள்ளிக்கொண்டுபோய் ஒரு தெரிந்தவர்களின் வீட்டில் விட்டுவிட்டு அவர்களிடம் ஒரு துவிச்சக்கர வண்டியை வாங்கிக்கொண்டு நண்பனைத் தேடிப்புறப்பட்டோம்.
நாங்கள் முள்ளியவளை வந்தபோது நண்பனின் அப்பாவும், நண்பனும் கயட்டையடி நல்லடக்க இடத்துக்கு சென்றுவிட்டார்கள் என்றும் நண்பனின் அம்மா, ஒரு அக்காவின் உடலங்கள் கிடைத்திருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்தத் துயரச் செய்தியுடன் கயட்டையடி நோக்கி சென்றால் அழுகை...அழுகை... நிறைந்த உறவுகள்.. உறவுகளின் உடலங்கள் புதைக்கப்பட்டுக் கொண்டிருந்தன.... நண்பனின் துன்பத்தில் பங்கெடுத்தேன்.. ஆனாலும் கடைசிவரை அவனது அம்மா, அக்கா ஆகியோரின் உடலங்கள் அங்கு வரவேயில்லை.. இரவாகியமையால் நண்பனையும் அழைத்துக் கொண்டு அவனது தங்குமிடத்துக்கு வந்தோம்..











இந்திய அணியைப் பொறுத்த வரையில் தங்கள் நாட்டில் நடந்த தொடரை வெற்றிகொண்டேயாக வேண்டிய கட்டாயத்தில் முதல்போட்டியை கஷ்டப்பட்டு சமநிலைப்படுத்திவிட்டு அடுத்த இரண்டு போட்டிகளையும் மிகவும் அபாரமாக வெற்றிபெற்று டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியிருக்கிறார்கள். அந்த வகையில் இதுவரையில் முதலிடத்தில் இருந்த தென்னாபிரிக்கா இரண்டாமிடத்துக்கும், இரண்டாமிடத்திலிருந்த இலங்கை நான்க்காமிடத்துக்கும் பின்தள்ளப்பட்டிருக்கின்றன. நான்காமிடத்திலிருந்த அவுஸ்திரேலியா மூன்றாமிடத்துக்கு முன்னேறியுள்ளது.
இலங்கை அணியைப் பொறுத்த வரையில் முதலாவது இனிங்ஸ்ஸில் டில்ஷான் சதமடித்து (109 ) காப்பாற்றியிருந்தார். அத்துடன் மத்தியுஸ் (99 ) ஒரு ஓட்டத்தினால் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டிருந்தார். பரணவிதாரண (53 ) அரைச் சதம் கடந்திருந்தார். ஆனால் இரண்டாவது இனிங்ஸ்ஸில் அணித் தலைவர் சங்கக்கார (137 ) சதம் கடந்திருந்தார். பரணவிதாரண (54 ) அரைச் சதம் கடந்தார். தவிர வேறு எந்தவொரு வீரர்களும் பிரகாசிக்கவில்லை. பந்துவீச்சில் முரளிதரன் (4 ), ஹேரத் (3 ) ஆகியோர் ஓரளவுக்கு
இவ்வாறாக ஒரு இனிங்ஸ்ஸாலும் 24 ஓட்டங்களினாலும் இன்றைய மூன்றாவது போட்டியை வெற்றி பெற்றதன் மூலமாக தொடரை 2 -0 என்று கைப்பற்றியிருக்கும் இந்திய அணி அடுத்து நடைபெற உள்ள 2 போட்டிகளைக் கொண்ட 20 -20 போட்டியிலும் சாதிக்குமா??? இல்லையேல் இலங்கை பழிதீர்க்குமா??? பொறுத்திருந்து பார்ப்போம்.......


